பால்மோரல் மாளிகையில் கேட் மிடில்டன் எடுத்துச் சென்ற பொருள்... முதல்முறையாக நெறிமுறையை மீறிய ராணியார்
பால்மோரல் மாளிகைக்கு விஜயம் செய்வது என்பது ராஜகுடும்பத்தில் புதிதாக இணையும் எவருக்கும் கனவு
அவர் நம்பிக்கையானவர் என்பதும் ராணியார் புரிந்து வைத்திருந்தார் என்பதே இதில் சிறப்பான விடயம்
ஸ்கொட்லாந்தின் பால்மோரல் மாளிகையில் கேட் மிடில்டன் கமெரா எடுத்துச் சென்றதை, நெறிமுறைகளை மீறி ராணியார் அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்கொட்லாந்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பால்மோரல் மாளிகைக்கு விஜயம் செய்வது என்பது ராஜகுடும்பத்தில் புதிதாக இணையும் எவருக்கும் முதன்மையான கனவு என்றே கூறப்படுகிறது.
@getty
ஆனால், கேட் மிடில்டனுக்கு மறைந்த ராணியார் அந்த வகையில் முழு சுதந்திரம் அளித்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ராஜகுடும்பத்து நெறிமுறைகளை மீறி, பால்மோரல் மாளிகைக்குள் புகைப்படங்களை பதிவு செய்ய ராணியார் கேட் மிடில்டனை அனுமதித்துள்ளார்.
இதுவே, மிக அரிதான விடயம் என குறிப்பிட்டுள்ள ராஜகுடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர், கேட் மிடில்டனை ராணியார் அந்த அளவுக்கு நம்பினார் என்றே கூறியுள்ளார்.
மட்டுமின்றி, புகைப்படமெடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் கேட் மிடில்டன் என்பது ராணியாருக்கு தெரியும் என்பதுடன், அவர் நம்பிக்கையானவர் என்பதும் ராணியார் புரிந்து வைத்திருந்தார் என்பதே இதில் சிறப்பான விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த நம்பிக்கைக்கு களங்கம் ஏற்படுத்தாமல், பால்மோரல் மாளிகையில் கேட் மிடில்டன் பதிவு செய்துள்ள புகைப்படங்கள் எதுவும் இந்த நாள் வரையில் வெளியாகவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
@Tolga Akmen
இதனாலையே கேட் மிடில்டன் மதிக்கப்படுகிறார், கேட் மிடில்டன் நம்பிக்கையானவர், பிரித்தானியாவுக்கு, அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி மொத்த ராஜகுடும்பத்திற்கும் விசுவாசமானவர் என குறிப்பிட்டுள்ளார்.
2009ல் தான் முதன் முறையாக கேட் மிடில்டன் பால்மோரல் மாளிகைக்கு விஜயம் செய்துள்ளார். திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இளவரசர் வில்லியமுடன் ராணியாரை சந்திக்க பால்மோரல் மாளிகைக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையிலேயே நெறிமுறைகளை மீறி ரணியார் புகைப்படங்கள் பதிவு செய்ய கேட் மிடில்டனுக்கு அனுமதி அளித்துள்ளார்.