மனைவியின் வயிற்றைக் கிழித்து கருவை கலைத்த கொடூர கணவன்! ஸ்கேன் ரிப்போர்ட்டால் நடந்த பயங்கரம்
இந்தியாவில் கணவர் ஒருவர் மனைவியின் வயிற்றை கிழித்து கருவை கலைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த். கூலித் தொழிலாளியான இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இதையடுத்து விஜயலட்சுமி மூன்றாவது முறையாக கர்ப்பம் அடைந்தார். ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் என்பதால், இந்த முறை அரவிந்த் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார்.
தன் உறவினர்களிடம் எல்லாம், தனக்கு பிறக்க போகும் குழந்தை, ஆண் குழந்தை தான் என்று கூறிக் கொண்டே இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் மனைவியின் வயிற்றில் இருக்கும் வளர்ச்சி மற்றும் அது என்ன குழந்தை என்பதை அறிவதற்காக, அரவிந்த் மனைவியை ஸ்கேன் செண்டருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது ஸ்கேன் செண்டரில், இந்த முறையும், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை தான் என்று கூற, இதைக் கேட்டு அரவிந்த் அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின் மனைவியிடம் இந்த குழந்தையை கலைத்துவிடு என்று கூறியுள்ளார்.
ஆனால் விஜயலட்சுமி இதற்கு மறுத்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சம்பவ தினத்தன்று, அரவிந்த் வீட்டிற்கு இரண்டு பேரை அழைத்து வந்துள்ளார்.
அப்போது அவர்கள் விஜயலட்சுமியை வலுக்கட்டாயமாக பிடித்து கருவலை கலைக்க முயன்றுள்ளனர். இவர்களிடம் தன்னையும் வயிற்றில் உள்ள பிஞ்சுவையும் காப்பாற்றி கொள்ள விஜயலட்சுமி போராடியுள்ளார்.
ஆனாலும், கத்தி எடுத்து விஜயலட்சுமியின் வயிற்றை கத்தியால் அறுத்து, கருவை கலைத்துள்ளனர். இதனால் விஜயலட்சுமிக்கு இரத்தப் போக்கு அதிகம் ஏற்பட்டு, அதிகம் வெளியேறவே, மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இதையடுத்து வலி பொறுக்க முடியாமல் விஜயலட்சுமி அலறியதைக் கேட்டு, ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அவர் இருக்கும் நிலையைக் கண்டு, உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் விஜயலட்சுமிக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியவந்த்தால், பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.