வங்காளதேசத்தை வெளியேற்றிய இலங்கை அணி! கடைசி ஓவரில் 3 விக்கெட் வீழ்த்திய சமரி அதப்பத்து
மகளிர் உலகக்கிண்ணத்தில் இலங்கைக்கு எதிராக தோல்வியை சந்தித்த வங்களாதேச அணி முதல் அணியாக வெளியேறியது.
ஹாசினி பெரேரா 85 ஓட்டங்கள்
நவி மும்பையில் நேற்று நடந்த மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கை மற்றும் வங்காளதேச அணிகள் மோதின.
முதலில் ஆடிய இலங்கை அணி 48.4 ஓவர்களில் 202 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஹாசினி பெரேரா 85 (99) ஓட்டங்களும், சமரி அதப்பத்து 46 (43) ஓட்டங்களும் எடுத்தனர். சொர்ணா 3 விக்கெட்டுகளும், ரபேயா கான் 2 விக்கெட்டுகளும், மருஃபா அக்தர், நிஷிதா மற்றும் நஹிதா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய வங்காளதேச அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 195 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது. அணித்தலைவர் நிகர் சுல்தானா 77 (98) ஓட்டங்களும், கடைசி வரை களத்தில் நின்ற ஷர்மின் அக்தர் 64 (103) ஓட்டங்களும் விளாசினார்.
சமரி அதப்பத்து மிரட்டல்
பரபரப்பான கடைசி ஓவரை வீசிய சமரி அதப்பத்து (Chamari Athapaththu) மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதுவே வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அவர் 10 ஓவர்கள் வீசி 42 ஓட்டங்கள் கொடுத்து மொத்தம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுகந்திகா குமாரி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
வங்காளதேச அணி 5வது தோல்வியை சந்தித்ததால், முதல் அணியாக மகளிர் உலகக்கிண்ணத் தொடரை விட்டு வெளியேறியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |