திருநங்கை விளையாட்டு வீரர்களுக்கு தடை: ட்ரம்ப் நிர்வாகம் இறுதி எச்சரிக்கை
அமெரிக்காவில் உயர்நிலைப் பாடசாலை விளையாட்டுகளில், திருநங்கை விளையாட்டு வீரர்களை தடை செய்வது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் கலிபோர்னியாவிற்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருநங்கை விளையாட்டு வீரர்கள்
கலிபோர்னியா இன்டர்ஸ்காலஸ்டிக் ஃபெடரேஷன் மாநில இறுதிப் போட்டியில், உயர்நிலைப் பாடசாலை ஜூனியர் ஹெர்னாண்டஸ் (16) கலந்துகொண்டு உயரம் தாண்டுதல், ட்ரிபிள் ஜம்ப் ஆகியவற்றில் தங்கப் பதக்கங்களை வென்றார்.
ஒரு பெண்ணாக அடையாளம் காணும் அவர் உயிரியல் ஆண் ஆவார். வார இறுதியில் நடந்த போட்டியில் பெண் போட்டியாளர்களை அவர் தோற்கடித்தார்.
இதுபோல் ஆண் குழந்தைகளாகப் பிறந்த திருநங்கைகள் சிறுமிகளை எதிர்த்துப் போட்டியிடுவது அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் காரணமாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் 'பெண்கள் விளையாட்டுகளில் ஆண்களை விலக்கி வைக்கவும்' என்ற நிர்வாக உத்தரவில் கையெழுத்திடப்பட்டது.
இறுதி எச்சரிக்கை
இந்த நிலையில், கலிபோர்னியாவில் உள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பாடசாலை மாவட்டங்களுக்கு எதிராக டொனால்ட் ட்ரம்பின் நீதித்துறை ஒரு பாரிய அளவிலான தாக்குதலைத் தொடுத்துள்ளது.
அதாவது, உயர்நிலைப் பாடசாலை விளையாட்டுகளில் திருநங்கை விளையாட்டு வீரர்களைத் தடை செய்வது குறித்து, கலிபோர்னியாவிற்கு ட்ரம்ப் நிர்வாகம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சூன் 9ஆம் திகதிக்குள், DoJ அதிகாரிகளுக்கு அவர்களின் பதிலை தெரிவிக்க மாவட்டங்களுக்கு ஏழு நாள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |