பிரித்தானிய மகாராணியை பதவியிலிருந்து நீக்கி.. பிரிட்டிஷ் முடியாட்சிக்கு முடிவுகட்டிய பிரபல நாடு
கரீபியன் தீவு நாடான பார்படோஸ், நாட்டின் தலைவராக இருந்து பிரித்தானியா மகாராணியை பதவியிலிருந்து நீக்கி, அவருக்கு பதிலாக முதல் ஜனாதிபதியை தேர்ந்தெடுத்து பிரிட்டிஷ் முடியாட்சிக்கு முடிவுகட்டியுள்ளது.
முன்னாள் பிரிட்டிஷ் காலனியாக இருந்த பார்படோஸ் 1966-ல் விடுதலையடைந்தது. எனினும், அங்கு தொடர்ந்து பிரிட்டிஷ் முயடியாட்சி கீழ் ஆட்சி நடைபெற்று வந்தது.
பார்படோஸில் சமீபத்திய ஆண்டுகளில் முழு இறையாண்மை மற்றும் உள்நாட்டு தலைமைக்கான அழைப்புகள் அதிகரித்தன.
இந்நிலையில் கடந்த ஆண்டு நாட்டை குடியரசு அந்தஸ்த்துக்கு மாற்றுவதற்கான திட்டத்தை பார்படோஸ் அரசாங்கம் அறிவித்தது.
இதைத்தொடந்து, புதன்கிழமை சட்டசபை மற்றும் செனட்டின் கூட்டு அமர்விற்கு பிறகு பார்படோஸில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் நடந்தது.
புதன்கிழமை சட்டசபை மற்றும் செனட்டின் கூட்டு அமர்வில் நடந்த வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெற்று Dame Sandra Mason நாட்டின் முதல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இது ஒரு மைல்கல் என்று தனது அறிக்கையில் கூறிய அரசாங்கம் , இது குடியரசுக்கான பாதை என குறிப்பிட்டது.
இந்த தேர்தல் தேசத்திற்கான முக்கியமான தருணம் என்று பிரதமர் Mia Mottley விவரித்தார்.
{
நாட்டின் முதல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 72 வயதான Dame Sandra Mason, எதிர்வரும் நவம்பர் 30ம் திகதி, அதாவது பார்படோஸின் 55வது சுதந்திர தினத்தன்று பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு முதல் தீவின் கவர்னர் ஜெனரலாக இருந்த முன்னாள் சட்ட நிபுணர் Dame Sandra Mason, பார்படோஸ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பணியாற்றிய முதல் பெண்மணியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.