லண்டனில் பெண் ஒருவரால் சில தினங்களுக்கு முன் பட்டப்பகலில் குத்தி கொல்லப்பட்ட நபர் யார்? வெளியான புகைப்படம் மற்றும் விபரம்
லண்டனில் முடி திருத்தும் நபர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் கொரோனா பரவல் இருந்தாலும், வன்முறைகள், கொலை சம்பவங்கள் போன்றவை குறைந்த பாடில்லை. அந்த வகையில், கடந்த 4-ஆம் திகதி வடக்கு லண்டனின் Stoke Newington-வில் உள்ள Stamford Hill-ல் இருக்கும் குடியிருப்பு பகுதியில், நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்நிலையில், தற்போது உயிரிழந்த நபரின் பெயர் Turgay Özcan என்பதும், 33 வயது மதிக்கத்தக்க இவர் முடி திருத்தம் பணியில் இருந்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், இவரை அங்கிருக்கும் பகுதி மக்கள் மிகவும் நல்லவர், திறமையான மற்றும் அன்பானவர், எப்போதும் சிரித்தபடியே இருப்பார் என்று கூறியுள்ளனர். அவரின் நண்பரும், எப்போதும் ஒரு எனர்ஜிடிக்காகவே இருப்பான், சிரித்தபடியே இருப்பான்.
ஆனால் இப்போது அவன் இல்லை என்கிற போது வேதனையாக இருக்கிறது என்று கூறியுள்ளார். சம்பவ தினத்தன்று பெண் ஒருவரே அவரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்க, பொலிசார் ஆம்புலன்ஸ் உதவியுடன் வந்த போதும், அவரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை, இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக 31 வயது மதிக்கத்தக்க Katarzyna Poniatowska என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வேறு யாரையும் நாங்கள் தேடவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள அப்பெண் வரும் 7-ஆம் திகதி Thames Magistrates நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். Katarzyna Poniatowska-வுடன் Turgay Özcan பார்த்திருப்பதாகவும், அவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும் அருகில் வசிப்பவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், முழு விசாரணைக்கு பின்னரே உண்மை என்ன என்பது தெரியவரும்.