என்னை மிரட்டுகிறார்கள்! மடாதிபதி தூக்கிட்டு தற்கொலை..சிக்கிய கடிதம்

Karnataka
By Sivaraj Oct 25, 2022 12:43 PM GMT
Report

தன்னை மிரட்டுவதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட மடாதிபதி பசவலிங்க சுவாமி 

பசவலிங்க சுவாமி மடாதிபதி ஆக பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆனதை சமீபத்தில் கொண்டாடினார்

இந்திய மாநிலம் கர்நாடகாவில் மடாதிபதி கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் காஞ்சுக்கல் என்ற மடத்தில் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமி(45). இவர் 1997ஆம் ஆண்டு முதல் மடாதிபதியாக செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் பசவலிங்க சுவாமி உறங்க சென்றார். ஆனால் காலை 4 மணிக்கு அவர் பூஜை செய்ய வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மடத்தில் உள்ளவர்கள் அறையின் கதவை தட்டினர்.

ஆனால் கதவு திறக்காததால் அறையில் பார்த்தபோது பசவலிங்க சுவாமி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்த பொலிஸார் பசவலிங்க சுவாமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

என்னை மிரட்டுகிறார்கள்! மடாதிபதி தூக்கிட்டு தற்கொலை..சிக்கிய கடிதம் | Basavalinga Swamy Mutt Suicide Karnataka

மடத்தில் சோதனை நடத்தப்பட்டபோது பசவலிங்க சுவாமி எழுதி வைத்திருந்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில், 'பஞ்சுகால் பாண்டே மடத்தின் மடாதிபதி பொறுப்பில் இருந்து சிலர் என்னை விலக்க நினைக்கிறார். இதற்காக எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான செய்திகளை பரப்ப நினைக்கின்றனர். இதுதொடர்பாக என்னை மிரட்டினர்' என அவர் எழுதியிருந்தார்.

மேலும் மிரட்டலால் தற்கொலை செய்துகொள்வதாகவும், தனது முடிவுக்கு காரணமானவர்களின் பெயர்களையும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தற்கொலை தொடர்பாக கடிதத்தில் இருந்த பல விடயங்களை பொலிஸார் வெளியிட மறுத்துவிட்டனர்.

என்னை மிரட்டுகிறார்கள்! மடாதிபதி தூக்கிட்டு தற்கொலை..சிக்கிய கடிதம் | Basavalinga Swamy Mutt Suicide Karnataka

கடிதத்தின் அடிப்படையில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இதேபோல் சிலும்பி மடத்தின் மடாதிபதி தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.  

4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Stouffville, Canada

05 Dec, 2025
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
நன்றி நவிலல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, Markham, Canada

06 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US