இளவரசி டயானாவின் மரணத்திற்கு யார் காரணம்? முற்றும் நெருக்கடி: 126 பக்க அறிக்கையை தாக்கல் செய்த நீதிபதி
பிரித்தானியா இளவரசி டயானாவின் மரணம் குறித்த விசாரணையின் அறிக்கையை, நீதிபதி வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியா அரச குடும்பத்தின் மருமகள் ஆன, டயானா, இயல்பாகவே அனைவரிடத்திலும் சாதரணமாக பழகும் தன்மை கொண்டவர். இதன் காரணமாகவே அவர் மிகவும் பிரபலமானார்.
இவர் இளவரசர் சார்லஸின் முதல் மனைவியான டயானாவிற்கு, இரண்டு மகன்கள் பிறந்தனர். அவர்கள் தான் தற்போதைய இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி. அரச குடும்பத்தில் மருமகளாக ஆன போதிலும், அவ்வப்போது சார்லஸ் மற்றும் டயானாவிற்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தது வந்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து கடந்த 1195-ஆம் ஆண்டு பி.பி.சி. சேனல் நிருபர் மார்ட்டின் பஷீர் டயானாவை பேட்டி எடுத்தார். அந்த பேட்டியின் போது, டயானா, தனக்கும் தனது கணவர் சார்லஸுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள், சார்லஸுக்கும் பமீலாவுக்கும்(தற்போதைய மனைவி) இடையிலான தொடர்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்த உண்மைகளை உடைத்தார்.
இந்த பேட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால், அரச குடும்பமே டயானா மீது கோபத்தில் இருந்துள்ளது. இதன் காரணமாக அந்த பேட்டிக்கு பின் ஊடகங்களில் இருந்து டயானா விலகி இருந்தார்.
இது போன்ற நிலையில், தான் கடந்த 1997 ஆம் ஆண்டு 31-ஆம் திகதி பத்திரிகையாளர்களுக்கு அஞ்சி காரில் வேகமாக சென்றபோது டயானா விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்நிலையில், டயானாவின் பேட்டி தொடர்பாக பிபிசி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி லார்ட் டைசன் விசாரணை நடத்தினர். இதையடுத்து இது குறித்து அவர் சமீபத்தில் 126 பக்க அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், மார்ட்டின் பஷீர் நம்பமுடியாதவர் மற்றும் நேர்மையற்றவர் என்றும் இந்த பேட்டி தொடர்பாக பதிலளிக்கும்போது பிபிசி தனது உயர்ந்த தரத்தை இழந்துவிட்டது.
இந்த பேட்டிக்காக மார்ட்டின் பஷீர் போலி ஆவணங்களை பயன்படுத்தியுள்ளார். பஷீரின் வஞ்சனைகள் குறித்து தெரிந்தும் பிபிசி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனை முடி மறைக்க முயன்றுள்ளது. அதாவது போலி வங்கி அறிக்கைகள், போலி ஆவணங்களை பயன்படுத்தி, தான் கண்காணிப்பில் உள்ளதை போன்ற எண்ணத்தை டயானாவுக்கு ஏற்படுத்தியுள்ளார்.
அதன் மூலம் டயானாவின் சகோதரரின் நம்பிக்கையைபெற்று அதன் மூலம் டயானாவை பேட்டி கண்டார். இந்த விவகாரங்கள் பிபிசிக்கு தெரிந்தபோதிலும் பேட்டி மீதான எதிர்பார்ப்பு காரணமாக அவற்றை மூடி மறைத்துள்ளது.
இந்த விவகாரங்கள் தற்போது வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை அறிக்கை வெளியானதை தொடர்ந்து பிபிசி மன்னிப்பு கோரியுள்ளது.
இந்நிலையில், விசாரணை அறிக்கை தொடர்பாக பேட்டியளித்துள்ள டயானாவின் மகன்கள் இளவரசர்கள் வில்லியம், ஹரி , தங்களுடைய தாய் டயானா அளித்த நேர்காணலுக்கும், விபத்தில் உயிரிழந்ததற்கும் நேரடியாகத் தொடர்பு இருக்கிறது என்று சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
மேலும், டயானாவின் சகோதரர் சார்லஸ் ஸ்பென்ஸர், தன் சகோதரி 1995-ஆம் ஆண்டு அளித்த பேட்டியின் போது அவரிடம் பேட்டி எடுத்த நிரூபர் மார்டின் பஷீர் போலியான வங்கிக்கணக்கு, ஆவணங்களை அளித்து பேட்டி எடுக்கஅனுமதி பெற்றார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.