ஐபிஎல் 2022 இங்கு தான் நடைபெறலாம்? பிளான் போட்ட பிசிசிஐ
இந்தியாவில் ஓமைக்ரான் பரவல் வேகமாக நடந்து வரும் நிலையில், ஐபிஎல் 2022ம் ஆண்டுக்கான போட்டிகளை எங்கு நடத்தலாம் என்பது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் 2022ம் ஆண்டுக்கான போட்டிகளை வருகிற ஏப்ரல்- மே மாதங்களில் இந்தியாவில் நடத்தவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துவிட்டது.
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் தொடரில் லக்னோ, அகமதாபாத் ஆகிய அணிகளையும் சேர்த்து மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், போட்டிகளை எங்கு நடத்தலாம் என்பது குறித்து பிளான் B ஒன்றினை போட்டுவைத்துள்ளதாம் பிசிசிஐ.
இந்த திட்டத்தின்படி, நடப்பாண்டின் அனைத்து ஐ.பி.எல். ஆட்டங்களையும் மராட்டிய மாநிலம் மும்பையில் நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளது.
அங்குள்ள வான்கடே மைதானம், பிரபோர்ன் ஸ்டேடியம், நவீன் மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம் ஆகிய 3 மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
ஏப்ரல்- மே மாத நிலவரங்களை பொறுத்து பிளான் B செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.