பிசிசிஐ கொடுத்த கவுரவத்தை உதறி தள்ளிய விராட் கோலி! கொடுத்த சரியான பதிலடி
இந்திய அணி வீரரான விராட் கோலி, பிசிசிஐ கொடுத்த கவுரத்தை வேண்டாம் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் ஆன, கோலி திடீரென்று தன்னுடைய கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஆரம்பத்தில் டி20, ஒருநாள் ஆகிய போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய கோலி, தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் விலகியுள்ளதால், இது அவருடைய ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்திய அணி, இலங்கை அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது(பிப்ரவரி 25-ஆம் திகதி). இது கோலிக்கு 100-வது டெஸ்ட் போட்டி என்பதால், அந்த போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறவுள்ளதால், அவரை கவுரவிக்கும் விதமாக இந்த போட்டிக்கு கோலி கேப்டனாக இருக்கும் படி கூறியுள்ளது.
அதற்கு கோலியோ, பிசிசிஐ-யிடம் ஒரே ஒரு போட்டி எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது.இந்த மனநிலையுடையவன் நான், எனக்கு எதுவும் வேண்டாம் என்று பதில் அளித்துள்ளார்.