இலவச உணவு இல்லை என திருப்பி அனுப்பப்படும் மக்கள்: ஜேர்மனியிலா இந்த நிலை?
ஜேர்மனியில் இலவச உணவு வழங்கும் உணவு வங்கிகள், புதிதாக வருபவர்களை உணவு இல்லை என திருப்பி அனுப்பும் நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜேர்மனியில் சுமார் 13.8 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழோ அல்லது அதற்கு அருகிலோ வாழ்கிறார்கள்.
கோவிட் காலகட்டத்தின்போது உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று என அறியப்படும் சுவிட்சர்லாந்தில் இலவச உணவுக்காக மக்கள் வரிசையில் நிற்கும் படங்கள் வெளியாகி புருவம் உயர்த்தச் செய்தன.
பிரித்தானியாவில் பல மில்லியன் குடும்பங்கள் ஒரு வேளை உணவைத் தவிர்க்கவோ அல்லது சத்துள்ள உணவை குடும்பத்தினருக்கு அளிக்கவோ திணறிவருவதாக இன்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவின் வலிமையான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் ஜேர்மனியும் அதற்கு விதிவிலக்கில்லையோ என எண்ணத் தோன்றும் வகையில் சில செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆம், ஜேர்மனியில் இலவச உணவு வழங்கும் உணவு வங்கிகள், புதிதாக வருபவர்களை உணவு இல்லை என திருப்பி அனுப்பும் நிலை உருவாகியுள்ளதாக உணவு வங்கிகளில் தன்னார்வலர்களாக பணிபுரிவோர் தெரிவித்துள்ளார்கள்.
ஜேர்மனியில் சுமார் 13.8 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழோ அல்லது அதற்கு அருகிலோ வாழ்கிறார்கள். விலைவாசி கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், உணவு வங்கிகளுக்கு வரும் நன்கொடைகளும் குறைந்துவருவதால், இலவச உணவு வழங்க உணவு வங்கிகள் தடுமாறி வருகின்றன.
எனவே சில உணவு வங்கிகள் தங்களுக்கு உதவுமாறு வசதி படைத்தவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.