ஆசைக்காக கடற்கரையில் பிரசவம்; பிறந்த குழந்தையுடன் வெளிநாட்டில் மாட்டிக்கொண்ட பிரித்தானிய தம்பதி
அழகான கடற்கரையில் குழந்தையைப் பெற்றெடுக்க விரும்பிய பிரித்தானிய பெண் ஒருவர் இப்போது தீர்க்க முடியாத சிரமங்களை எதிர்கொண்துவருகிறார்.
பிறந்த குழந்தையுடன் கடற்கரையில் மாட்டிக் கொண்டுள்ள அப்பெண், வீட்டிற்கு செல்ல முடியாமல் அங்கேயே தவித்துவருகிறார்.
பிரித்தானியாவைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர் யூலியா குர்ஸ் (38), அவரது கணவர் கிளைவ் 51 வயது. இவர்களுக்கு ஏற்கனவே எட்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
தங்களது இரண்டாவது குழந்தையை ஒரு அழகான கடற்கரையில் பெற்றெடுக்க வேண்டும் என்று யூலியா ஆசைப்பட்டார். கிளைவ் தனது மனைவி யூலியாவின் விருப்பத்தை நிறைவேற்ற தென் கொரியாவில் உள்ள கிரனாடா கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்.
SWNS
எனவே குழந்தையைப் பெற்றெடுக்க 6437 கிலோமீட்டர்கள் பயணம் செய்தனர். யூலியாவின் கனவு நனவாகியது. ஏப்ரல் 23-ஆம் திகதி கிரனாடா கடற்கரையில் லூயிஸ் என்ற பெண் குழந்தை பிறந்தது.
ஆனால் அவர்கள் பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள், தென் கொரியா கடற்கரையில் குழந்தை பிறந்தது . இதனால், குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பிரச்னை ஏற்பட்டது. அந்தக் குழந்தை எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது பாரிய பிரச்சினையாகிவிட்டது.
அந்தக் குழந்தை தங்கள் குழந்தைதான் என்பதை நிரூபிக்க வேண்டும். குடிவரவுத் துறையினர் குழந்தையின் பிறப்புச் சான்றிதழைக் கேட்டதிலிருந்து தம்பதியருக்கு உண்மையான சிக்கல்கள் தொடங்கியது. இதனால், குழந்தை பிறந்த பிறகும் நான்கு மாதங்கள் அங்கேயே இருக்க வேண்டியதாயிற்று. சொந்த ஊர் செல்ல அரசு அலுவலகங்களில் அலைகின்றனர். பணம் இல்லாததால், அவர்கள் தவித்து வருகின்றனர்.
மறுபுறம், அவர்களின் மூத்த மகள் எட்டு வயது எலிசபெத் இங்கிலாந்தில் தங்கியிருந்தார். அவரியாவது தென்கொரியாவுக்கு தங்களுடன் வரவைக்கலாம் என முயன்றபோது, கடவுச்சீட்டை பரிசீலனை செய்யாததால் அவர்களால் எலிசபெத்தை அழைத்துவர முடியவில்லை.
SWNS
இந்த அவல நிலை குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த யூலியாவின் கணவர் கிளைவ், இங்கு தென்கொரியாவில், தங்களுக்கு பிறந்த குழந்தையின் பெற்றோர் தாங்கள் தான் என்பதற்கு ஆதாரம் காட்ட வேண்டும், இதற்காக பதிவு அலுவலகம் சென்று பிறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளோம், அது வருவதற்கு சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்று கூறினார்.
ஆனால் இது வரை பிறப்பு சான்றிதழ் வராததால், பதிவு அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் கேட்டதாகவும், ஆனால் மருத்துவமனையில் குழந்தை பிறக்காததால், பிறப்பு சான்றிதழ் எப்படி வழங்குவது என கேள்வி எழுப்புகின்றனர். கடற்கரையில் பிறந்ததாக சொல்கிறீர்கள், ஆனால் அதுகுறித்து எங்களிடம் ஆதாரம் இல்லை, ஆதாரம் இல்லாமல் பிறப்புச் சான்றிதழ் வழங்க முடியாது என முடிவு செய்தார்கள் என ஆவேசமாக கூறினார்.
கிங் ஐரோப்பிய யூனியன் மருத்துவமனைக்குச் சென்றதாக அவர் கூறினார். அங்கு இருந்த ஊழியர்களாலும் குழந்தை பிறந்த விவரங்களை பதிவு செய்ய முடியவில்லை. குழந்தை பிறந்து 24 மணி நேரத்துக்குப் பிறகு பதிவுக்கு வந்ததாகவும், அதனால் எதுவும் செய்ய முடியாது என்று முடிவு செய்ததாகவும் கூறினார்.
குழந்தை பிறந்ததற்கான ஆதாரம் இல்லாததால் தங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் குழந்தை பிறந்த மகிழ்ச்சியை விட இந்த செயல்முறை தெளிவாக இல்லை என்றும் வேதனை தெரிவித்தனர்.
SWNS
6,000 பவுண்டுகள் ஏற்கனவே செலவிடப்பட்டுள்ளன. கையில் பணமில்லை. க்ளைவ் பிரித்தானியாவின் உதவியை நாடியதாகவும் ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் புலம்பினார்.
பின்னர் கிளைவ் இங்கிலாந்தில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டார். டிஎன்ஏ பரிசோதனை செய்ய பரிந்துரைத்தனர். இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
தங்களின் நிலைமை குறித்து பேசிய யூலியா, ''எனது ஆசைப்படி கடற்கரையில் குழந்தை பிறந்தது..மகிழ்ச்சியாக உள்ளது ஆனால் பிரசவத்திற்காக இந்த நாட்டிற்கு வந்தேன், இந்த நாட்டில் சிறைபிடிக்கப்பட்டு இங்கிலாந்து செல்ல முடியாமல் தவிக்கிறேன்... அங்கே தங்கியிக்கும் என் மூத்த மகள் அடிக்கடி நினைவுக்கு வருவாள். உறவினர் வீட்டில் தங்க வைத்தோம், அவள் எப்படி இருக்கிறாள் என்று கவலைப்படுகிறோம்,'' என கண்ணீருடன் கூறினார் யூலியா.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Beach birth, Beach Birth couple trapped in Grenada with new baby, Uk Couple Trapped with New Baby, British Couple Trapped in Grenada, Coast of Grenada