நரைமுடிக்கு தீர்வு வேண்டுமா? வீட்டில் இருக்கும் இந்த பொருட்களே போதும்!
Hair tips
white hair
By Kishanthini
இன்றைய காலக்கட்டத்தில் வயதான காலத்தில் வரவேண்டிய வெள்ளை முடி தற்போது இளம் தலைமுறையினருக்கும் அதிகமாக வந்துவிடுகிறது.
இது பரம்பரை வாரியாக வரும். ஆனால் சுற்றுச்சுழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் போன்றவற்றாலும் அதிகம் வருகிறது. தவிர தலைமுடிக்கு சரியான பராமரிப்பு கொடுக்காததும் முக்கியமான ஒன்று.
சிலர் வெள்ளை முடியை மறைக்க நிறப்பூச்சு பயன்படுத்துவார்கள். ஆனால் இது நிரந்தர தீர்வு கொடுக்காது. மேலும், பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். ஆனால் இதற்கு இயற்கையான முறையிலே தீர்வு காணலாம். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- டை அடித்து கொள்வதற்கு முதல் நாள் இரும்பு கடாய் ஒன்றில் தேவையான அளவு நெல்லிப்பொடி மற்றும் தேங்காய் எண்ணெயை காலத்து வைத்து விட வேண்டும். அடுத்த நாள் காலை இந்த கலவையை கொண்டு முடிக்கு டை அடிப்பது உங்கள் முடிக்கு அதிசயங்களை செய்யும்.
- பிளாக் காஃபி காய்ச்சி தயார் செய்து பின்னர் அதை ஆற விடுங்கள். பின் நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் எந்த வகை ஹேர் கண்டிஷனரிலும், இந்த ஆற வைத்த காஃபியை நன்றாக கலக்கி கொள்ளுங்கள். இந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். பின்னர் தலைமுடியை அலசி விடுங்கள்.
- முதலில் அரை கப் கெமோமில் பூக்களை தண்ணீரில் நன்கு கொதிக்க வைக்கவும். `பின் ஒரு மணி நேரம் ஆற வைக்கவும். உங்கள் தலைமுடியை ஈரப்படுத்தி, காய்ச்சிய கெமோமில் தேநீரை உங்கள் ஈரமான கூந்தல் வழியே சுமார் 10 முறை ஊற்றி சிறிது நேரம் காய வைத்து பின் நன்றாக அலசி கொள்ளவும்.
- பிளாக் டீ (5 தேக்கரண்டி / 5 டீபாக்ஸைப் பயன்படுத்தி) சில கப் காய்ச்சி கொள்ளுங்கள். பின் அது ஆறும் வரை காத்திருந்து உங்கள் தலைமுடியில் ஊற்றி 30 நிமிடங்கள் வரை ஊற விடவும். பின் வெதுவெதுப்பான நீரில் முடியை கழுவுங்கள்.
- அரை கப் வறுத்த இலவங்கப்பட்டை தூளை, அரை கப் கண்டிஷனர் அல்லது காய்கறி எண்ணெயுடன் குழைத்து பேஸ்ட் ஆக்கி கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உங்கள் ஈரமான கூந்தலில் தடவி, கலவையை ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் தலையை அலசவும் .
- தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்ற எண்ணெயுடன் கேரட் ஜூஸை கலந்து உங்கள் தலைமுடியில் தடவவும். உங்கள் தலைமுடியைக் கட்டி, ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கழுவ வேண்டும்.
- அரை கப் ஹென்னாவை எடுத்து கொண்டு அதை 1/4 கப் தண்ணீரில் கலக்கவும். இரவு முழுவது இந்த கலவையை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு மறுநாள் காலை பயன்படுத்துங்கள். சாதாரண தண்ணீரில் தலையை அலசுங்கள்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US