வெறும் வயிற்றில் டீ குடித்தால் ஏற்படும் மோசமான தீமைகள்! ஜாக்கிரதை
சிலருக்கு அதிகாலையில் எழுந்தவுடன் டீ குடிக்கும் பழக்கம் இருக்கும்.
இதை ’பெட் டீ’ என்றும் சொல்வார்கள். இதற்கு பழக்கப்பட்டவர்களால், இது இல்லாமல் அன்றைய வேலையைச் சரியாகச் செய்ய முடியாது.
’பெட் டீ’ குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து காண்போம்.
பெட் டீ குடிப்பதால் வரும் மிகப்பெரிய பிரச்சனை அசிடிட்டி, மலச்சிக்கல். இது செரிமான அமைப்புக்கு நல்லதல்ல.
காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் பித்த சாற்று செயல்முறை சரியாக நடக்காமல், உடலில் பதட்டம் உண்டாகிறது.
BONNINSTUDIO/Stocksy
காலையில் எழுந்தவுடன் டீ குடிப்பதால், அதில் சர்க்கரை உள்ளடக்கம் இருப்பதால், உங்கள் எடையை இது வேகமாக அதிகரிக்கக்கூடும்.
தேநீரில் காஃபின் அளவு அதிகமாக உள்ளது. இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
பெட் டீ குடிப்பதால் நரம்பியல் பிரச்சனைகள் ஏற்படலாம். இதன் காரணமாக பசியின்மை ஏற்படும் அபாயமும் இருக்கிறது என்பதை மறவாதீர்கள்.