குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான பீட்ரூட் அடை.., இலகுவாக செய்வது எப்படி?
இந்த சத்தான பீட்ரூட் அடையை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் சத்தான பீட்ரூட் அடையை வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பீட்ரூட்- 2
- கடலை மாவு- 1 கப்
- அரிசி மாவு- ½ கப்
- உப்பு- தேவையான அளவு
- மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- சீரகம்- ¼ ஸ்பூன்
- ஓமம்- ¼ ஸ்பூன்
- வெங்காயம்- 1
- பச்சைமிளகாய்- 2
- இஞ்சி- 1 துண்டு
- கறிவேப்பிலை- 1 கொத்து
- கொத்தமல்லி- சிறிதளவு
செய்முறை
முதலில் பீட்ரூட்டை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகம், ஓமம் சேர்த்து கலந்துகொள்ளவும்.
அடுத்து இதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து கலந்துகொள்ளவும்.
இதற்கடுத்து இதில் அரைத்த பீட்ரூட் கலவை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு போல் கலந்துகொள்ளவும்.
இறுதியாக அடுப்பில் தவா வைத்து கரைத்த மாவை அடை போல் சுட்டு எடுத்தால் சுவையான பீட்ரூட் அடை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |