கொரோனாவால் ஓராண்டுக்கும் மேலாக மருத்துவமனையில்... வீடு திரும்பிய பிரித்தானிய விமானிக்கு ஏற்பட்ட துயரம்
அமெரிக்க மருத்துவமனையில் 243 நாட்கள் கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் இருந்து மீண்ட பிரித்தானிய விமானி ஒருவர், நாடு திரும்பிய 2 மாதங்களில் மரணமடைந்துள்ளார்.
பிரித்தானியாவின் பெட்ச்வொர்த், சர்ரே பகுதியை சேர்ந்தவர் Nicholas Synnott. பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானியான இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஹீத்ரோவிலிருந்து ஹூஸ்டனுக்கு சென்றிருந்த நிலையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து டெக்சாஸ் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருந்து வந்தார். உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்து வந்தவர், நீண்ட 13 மாதங்களுக்கு பிறகு கொரோனாவில் இருந்து மீண்டு பிரித்தானியா திரும்பினார்.
ஆனால், தொடர்ந்து அவருக்கு மருத்தவ உதவி தேவைப்பட்டு வந்தது. இந்த நிலையில் பிரித்தானியா திரும்பிய 2 மாதங்களுக்கு பிறகு Nicholas Synnott மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட 13 மாதங்களுக்கு பிறகு கொரோனாவில் இருந்து மீண்டது சாதனையாகவே பார்க்கப்படுகிறது. Nicholas Synnott-ன் திடீர் மறைவு, அவரது குடும்பத்தினரை மொத்தமாக உலுக்கியுள்ளது.
உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் எண்ணியிருந்த நிலையில், குடும்பத்தாரின் கவனிப்பே அவர் கொரோனாவில் இருந்து மீண்டதற்கு காரணம் என மருத்துவர்கள் பலர் குறிப்பிட்டிருந்தனர்.