2 மாத குழந்தை குத்திக் கொலை! உயிருக்கு போராடும் மற்றொரு பிள்ளை! பிரித்தானியாவில் பயங்கரம்
பிரித்தானியாவின் வடக்கு அயர்லாந்து பகுதியில், ஒரு பெண் 2 மாத குழந்தையை குத்தி கொலை செய்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு அயர்லாந்தில், வடக்கு பெல்பாஸ்ட் பகுதியில் Ardoyne என்ற இடத்தில் செவ்வாக்கிழமை இரவு 8 மணியளவில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரமான அலறல் சத்தம் கேட்டதையடுத்து, Brompton Park பகுதி மக்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது 2 மாத பச்சிளம் குழந்தை குத்தப்பட்டு இறந்து கிடந்தது. அருகில், 2 வயது குழந்தை ஒன்று பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.
அந்தக் குழந்தையையும், அடிபட்டுக் கிடந்த அவர்களது தாயையும் பொலிஸார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவ இடத்தில், கொலையாளி என நம்பப்படும் 29 வயதுள்ள ஒரு பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அப்பெண் யார் என்பது குறித்த தகவலை பொலிஸார் வெளியிடவில்லை.
இந்த கொலை மற்றும் கொலை முயற்சிகள் குடும்ப தகராறு காரணமாக நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த சம்பவம் Ardoyne பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
? Police at the scene of a major incident in the Brompton Park area of Ardoyne, north Belfast, this evening: pic.twitter.com/fBTuQ2ILNz
— Q Radio News (@qnewsdesk) July 27, 2021


