வேகமாக முகத்தை வெள்ளையாக்க உதவும் வாழைப்பழ தோல்.., எப்படி பயன்படுத்துவது?
சூரிய கதிர்கள் போன்றவற்றால் முகம் மற்றும் உடம்பு பொலிவிழந்து கருப்பாக மாறுகின்றன.
அதேபோல், முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகப்பொலிவை அதிகரிக்க வாழைப்பழத்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பழுத்த வாழைப்பழத்தை எடுத்து அதை உரித்துக் கொள்ளவும்.
அதன் உள்ளே உள்ள வெள்ளைப் பகுதியை அகற்றி அதன் தோலை முகம் மற்றும் கழுத்தில் 5-7 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும்.
பின்னர் அதை 15 நிமிடங்கள் விட்டுவிட்டு, பின்னர் சாதாரண நீரில் முகத்தைக் கழுவவும்.
உங்கள் சருமத்தை மேம்படுத்த வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்தலாம்.
இது உங்கள் முகத்திற்கு இயற்கையான பளபளப்பை தருகிறது, சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
மேலும், கருவளையங்கள் மற்றும் கறைகளைக் குறைத்து, கண்களுக்குக் கீழே உள்ள சருமத்தை தெளிவாக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |