சளி, மலச்சிக்கலுக்கு தீர்வு தரும் பூண்டு பால்! ஆனால் இவர்கள் மட்டும் எச்சரிக்கையாக எடுக்க வேண்டுமாம்
இன்றைக்கு மனிதர்கள் எதிர்கொள்ளும் பல உடல்நலப் பிரச்னைகளுக்கு உணவுமுறை மாற்றமும் வாழ்க்கைமுறை மாற்றமும் ஒரு காரணம். பலரும், உடல் உழைப்பு இல்லாத வேலை செய்வதால் பலருக்கு பல வியாதிகள் வந்துவிடுகிறது.
இவர்கள் நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுக்க வேண்டும். அதற்கு பூண்டு உதவுகின்றது. பூண்டில் பல்வேறு மருத்துவ நன்மைகள் கொண்டுள்ளது.
இதனை பாலுடன் சேருக்கும் போது இன்னும் பல பயன்களை அள்ளித்தருகின்றது.
அந்தவகையில் தற்போது பூண்டு பால் எப்படி தயாரிக்கலாம்?என்ன நன்மைகள், யார் எல்லாம் எடுத்து கொள்ள கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- 1¼ கப் – பால்
- 4 – பூண்டு பல்
- 2 தேக்கரண்டி – பனை வெல்லம்
- மஞ்சள் (விரும்பினால்)
செய்முறை
தோல் உரித்த பூண்டு பல் 4 , சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். பாலை கொதிக்கவையுங்கள்.
நறுக்கப்பட்ட அல்லது நசுக்கிய பூண்டு துண்டுகளைச் சேர்த்து 5-7 நிமிடங்கள் லேசாக கொதிக்க விடுங்கள். பின்னர், நீங்கள் விரும்பினால் மஞ்சளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
பூண்டு மென்மையாகும் வரை வேகவைக்கவும். அதனுடன் பனை வெல்லத்தை சேர்த்து, அது முற்றிலும் கரையும் வரை வேகவையுங்கள். பருகுவதற்கு சூடாக பரிமாறவும்!
பூண்டு பாலை இப்படி தயாரித்தால் வாயில் மோசமான பூண்டு வாசனையை ஏற்படுத்தாது.
பூண்டு பால் யாரெல்லாம் சாபிடலாம்?
உங்களுக்கு நெஞ்செரிச்சல், இரைப்பை,வயிற்றுப் புண் இருந்தால் எச்சரிக்கையாக பூண்டு பாலை எடுத்துக்கொள்ள வேண்டும்.