தினமும் பாலில் பெருஞ்சீரகம் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா ?
பழங்கால மருத்துவத்தில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் இந்திய மசாலாக்களில் பெருஞ்சீரகமும் அடங்கும். இது இனிப்புகள், தேநீர் மற்றும் சுவையான உணவுகளில் கூடுதல் சுவையை அதிகரிக்க சேர்க்கப்படுகிறது.
இதனை பாலுடன் சேர்த்து அருந்தும் போது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக கூறப்படுகின்றது.
ஏனெனில் பாலில் ஆரோக்கியமான கொழுப்புகள், தாதுக்கள் மற்றும் புரதம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ள நிலையில் இதனுடன், பெருஞ்சீரகத்தை சேர்ப்பதால் கூடுதல் சுவையையும், ஊட்டச்சத்தையும் சேர்க்கிறது.
அந்தவகையில் தற்போது தினமும் பாலில் பெருஞ்சீரகம் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.
- பாலில் புரதம் மற்றும் கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. இதேபோல பெருஞ்சீரகம் கால்சியம், மாங்கனீசு, மெக்னீசியம் ஆகியவற்றின் நல்ல ஆதாரமாகும், எனவே கொதிக்கும் பெருஞ்சீரகம் சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால் பற்கள் மற்றும் எலும்புகள் வலுப்பெறும்.
- பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் கலந்து சாப்பிடுவதன் மூலம் பார்வை திறன் மேம்படும்.
- பெருஞ்சீரகம் கலந்த பாலை அருந்தி வந்தால், பெண்களுக்கு ஈஸ்டரோஜென் ஹார்மோன்கள் நன்கு தூண்டப்பெற்று மாதவிடாய் வலி மற்றும் முறையற்ற மாதவிடாய் பிரச்சனைகள் குணமாகும்.
- பெருஞ்சீரகம் கலந்த பாலில் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் இருப்பது சுவாச நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
- பெருஞ்சீரகம் கலந்த பாலை தினமும் குடித்து வருவது நல்லது. இதிலுள்ள “அனீதோல்” எனப்படும் வேதிப்பொருள், பெண்களில் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை தூண்டி தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது.
எப்படி எடுத்து கொள்ளலாம்?
1 டீஸ்பூன் பெருஞ்சீரக விதைகளை சேர்க்கவும். பின்னர் ஒரு கொதி வந்ததும் இறக்கி பாலை வடிகட்டி, சுவைக்கு ஏற்ப சிறிது சர்க்கரை/ வெல்லம் சேர்த்து அருந்தலாம். விரும்பப்படுபவர்கள் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள் சேர்த்து அருந்தலாம்.