பாலுடன் பெருங்காயத்தை சேர்ப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
பொதுவாக நாம் அன்றாடம் உண்ணும் உணவுப் பொருட்களிலேயே பால் மிகவும் இன்றியமையாத ஒன்று. பால் சுவையுடன் இருப்பதோடு, சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருளும் கூட.
அதிலும் பாலில் பெருங்காயத்தை கலந்து குடிப்பது வயிற்று பிரச்சனைகள் மற்றும் குடல் சார்ந்த செரிமான இயக்கத்தை சீராக்க உதவும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் .
அந்தவகையில் தற்போது இதனை சேர்ப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.
நன்மைகள்
- ஒரு கிளாஸ் பாலுடன் 50 முதல் 70 மில்லி கிராம் பெருங்காயத்தூளை தொடர்ந்து எடுத்து வந்தால், வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகளான புழுக்களை அழிக்கிறது.
- குடல் வறட்சியை நீக்கும்.
- அஜீரணம், வாயுத்தொல்லை, வயிற்று வலி, வாந்தி, விக்கல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் வழங்கும்.
-
பெருங்காயம் சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டும், மலம் கட்டுதல் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.
-
மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்றில் வீக்கம் போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது.
-
செரிமானத்திற்கான குடல் இயக்கத்தையும் தூண்டுகிறது.
- கல்லீரல் செயல்பாட்டை தூண்டி உடலை இலகுவாகவும் சுறுசுறுப்பாகவும் மாற்றுகிறது
எப்படி எடுத்து கொள்ளலாம்?
ஒரு கிராம் தூய பெருங்காயத்தை ஒரு மண் பானையில் தண்ணீரில் 72 மணி நேரம் ஊற வைக்கவும்.
அது சரியாகக் கரைந்ததும், ஒரு ஸ்பூன் தண்ணீரை 200 மில்லி வெதுவெதுப்பான பாலுடன் கலந்து, காலை மற்றும் இரவு உணவுக்கு பின் ஒரு மணி நேரம் கழித்து வெறும் வயிற்றில் குடிக்கவும்.
குறிப்பு
பாலுடன் பெருங்காயத்தை கலந்து குடிக்கும் போது, துவரம் பருப்பு, கத்தரிக்காயை தவிர்க்கவும். இரவில் தயிர், பழம், பழச்சாறு, சாட், ஊறுகாய், சாலட் சாப்பிட வேண்டாம். காலை உணவின் போது கொய்யா, மோர், மாதா, பாகற்காய், பப்பாளி சாப்பிடுவது நல்லது.