தினம் ஒரு வெள்ளரிக்காய் போதும்.. இந்த நோய்கள் கூட நெருங்கவே நெருங்காதாம்!
பெரும்பாலான காய்கறிகள் சமைத்து, பக்குவம் செய்து சாப்பிட வகையைச் சார்ந்ததாக இருக்கின்றன. ஒரு சில காய்கறிகள் பச்சையாகவே சாப்பிடும் வகையில் இருக்கின்றன.
அப்படியான ஒரு காய் தான் வெள்ளரிக்காய். சோடியம் ,மக்னீசியம் ,இரும்பு ,சிலிகான் ,குளோரின் ,கால்சியம் ,பாஸ்பரஸ் ,கந்தகம் போன்றவை அடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி பொட்டாசியம், தாதுப்பொருட்கள் ,நீர்ச்சத்து ,நார்சத்து போன்றவற்றும் நிறைந்துள்ளது.
இதனை தினமும் ஒரு துண்டு சாப்பிட்டு வருவதனால் உடலுக்கு பல ஆரோக்கியப்பலன்கள் கிடைக்கின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
அந்தவகையில் வெள்ளாரிக்காய் சாப்பிடுவதனால் பெறும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- வெள்ளரிக்காயில் 95 சதவிகிதம் நீர் இருப்பதால், நீர் இழப்பில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
- வெள்ளரிக்காயில் உள்ள புரோட்டீன், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறனை நம் உடலுக்குத் தருவதுடன், புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்கிறது. இது புற்றுநோய் செல்களில் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
- வெள்ளரிக்காயில் உள்ள நீர் மற்றும் நார்ச்சத்து நமது உடலின் செரிமான செயல்முறையை சீர் செய்கிறது. வாயு, மலச்சிக்கல் அல்லது வயிற்றில் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், ஒரு கிளாஸ் வெள்ளரி சாறு உங்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும்.
- வெள்ளரியை சிறிது நேரம் வாயில் வைத்து மெல்லுவதன் மூலம், வாயிலிருந்து வரும் துர்நாற்றம் முற்றிலும் விலகும். ஏனெனில் இது துர்நாற்றத்தை பரப்பும் பாக்டீரியாக்களை நீக்குகிறது.
- வெள்ளரிக்காய் அழகை அதிகரிக்கவும் பயன்படுகிறது. முகத்தின் கருமையை, வெள்ளரிக்காய் பேக் போடுவதன் மூலம் அதை நீக்கலாம். இது சருமத்தை பொலிவாக்கி, முகத்தை பளபளப்பாக வைத்திருக்கும். இது நமது சருமத்திற்கு டோனிங்காக செயல்படுகிறது.