இரவில் பாலுடன் சேர்த்து இதை குடித்து வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
Health tips
Milk
Cumin seeds
Immunity power
By Logeswari
பலருக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உண்டு. ஆனால் என்ன சாப்பிட வேண்டும் எப்போது சாப்பிட வேண்டும் என்று தெரிவதில்லை. அது மட்டும் இல்லாமல், உடலில் ஏற்படும் கோளாறுகளுக்கு நமது சமயலறையில் இருக்கும் பொருள்களை வைத்து எப்படி சரி செய்வது குறித்து பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:-
சீரக விதைகள்
பால்
மஞ்சள் தூள்
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் பால், 1/2 டீ ஸ்பூன் பெருஞ்சீரக விதைகள், சிறிதளவு மஞ்சள் போன்றவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். வெறும் 10 -15 நிமிடத்தில் பெருஞ்சீரக பால் தயார். இதனுடன் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து கொள்ளலாம்.
நன்மைகள்:-
- பெருஞ்சீரக விதைகளில் நிறைய விட்டமின்கள், தாதுக்கள், வைட்டமின் சி என்ற சத்து காணப்படுகிறது. அதுபோல பெருஞ்சீரக விதைகளில் எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இது உடல் மெட்டா பாலிசம், எலும்பு வளர்ச்சி, இரத்த சர்க்கரை போன்றவற்றை கட்டுபடுத்துகிறது.
- இரும்புச் சத்து குறைப்பாட்டால் ஏற்படும் இரத்த சோகை குறைப்பாட்டை இந்த பால் தடுக்க உதவுகிறது. பெருஞ்சீரக விதைகளில் இரும்புச் சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இது நம்முடைய இரத்தத்தில் உள்ள ஹூமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவுகிறது.
-
தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் 1 டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரக பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வாருங்கள். பெருஞ்சீரக விதைகளில் பாலிபினோல் ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்கள் புற்றுநோய்கள், உடல் பருமன், இதய நோய்கள், நீரிழிவு நோய்கள் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க உதவுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US