தினமும் காலையில் பிரியாணி இலை கொண்டு டீ குடிச்சு பாருங்க..! இந்த நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும்
பொதுவாகவே பிரியாணி இலையின் மருத்துவ குணங்களால் பழங்காலத்தில் இது பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்பட்டது.
குறிப்பாக இதில் புற்றுநோய் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன.
ஆகவே பல பெரிய பிரச்சனைகளை திறம்பட நிர்வகிக்கவும் உதவும். மேலும் ஆயுர்வேதத்தில் கூட இந்த பிரியாணி இலை பல்வேறு நோய்களை குணப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட பிரியாணி இலையைக் கொண்டு டீ தயாரித்து குடித்து வந்தால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளைத் தவிர்ப்பதோடு கட்டுப்படுத்தலாம்.
அந்தவகையில் இந்த டீயை எப்படி தயாரிக்கலாம்? இதன் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
டீ தயாரிப்பது எப்படி?
- பிரியாணி இலை - 3
- பட்டைத் தூள் - 1 சிட்டிகை
- தண்ணீர் - 2 கப்
- எலுமிச்சை மற்றும் தேன் (விருப்பத்திற்கேற்ப)
செய்முறை
- பிரியாணி இலையை நீரில் கழுவ வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
- பின் அதில் பிரியாணி இலை மற்றும் பட்டை தூள் சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
- பின்பு அதை வடிகட்டி, அதில் சுவைக்கேற்ப எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
- இந்த பிரியாணி இலை டீயை தினமும் காலையில் காபி, டீ-க்கு பதிலாக குடித்தால் நற்பலன்கள் கிடைக்கும்.
நன்மைகள்
- பிரியாணி இலை டீ போட்டு குடியுங்கள். இது இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, டைப்-2 சர்க்கரை நோயைக் கையாள்வதில் பயனுள்ளதாக இருக்கும்.
- உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.
- பல்வேறு சுவாச பிரச்சனைகளைப் போக்கும் திறன் கொண்டது.
- பூஞ்சை தொற்றுக்களை எதிர்த்துப் போராடும். இது தவிர இதில் வைட்டமின் சி-யும் இருப்பதால்.
- இது சருமத்தை எந்த வகையான தொற்று மற்றும் எரிச்சலில் இருந்தும் பாதுகாக்கும்.
- பிரியாணி இலை டீயானது இரைப்பை குடல் பாதிப்பைத் தடுப்பதோடு, சிறுநீர் கழிப்பதை ஊக்குவித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- பிரியாணி இலைகளில் உள்ள உட்பொருட்கள் வயிற்று உப்புசம், அஜீரண கோளாறு, மலச்சிக்கல் போன்றவற்றைத் தடுத்து, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- எப்போதும் மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்றால் பிரியாணி இலையைக் கொண்டு டீ தயாரித்து குடியுங்கள்.
- உடலினுள் உள்ள வீக்கத்தை எதிர்த்துப் போராடும்.
- இதயத்தின் தந்துகி சுவர்களை வலுப்படுத்தி, கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.
- புற்றுநோய் வரக்கூடாது என்று நினைத்தால் பிரியாணி இலை கொண்டு டீ போட்டு அவ்வப்போது குடியுங்கள்.