தினமும் ஒரு டம்ளர் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
மோர் என்பது பாலில் இருந்து பெறப்படும் நீர்மப் பொருட்களில் ஒன்று.
கோடையில் தாகம் ஏற்படும் போது தண்ணீர் குடிக்கிறோம், அடுத்ததாக நம் முன்னோர்கள் மோர் குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.
அந்தவகையில், தினமும் ஒரு டம்ளர் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
கிடைக்கும் நன்மைகள்
காரம் சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் மோர் குடித்தால் வயிற்று எரிச்சலில் இருந்து வயிறு குளிர்ச்சியாகும்.
மோருடன் சிறிது, இஞ்சி, சீரகம் சேர்த்து குடித்து வந்தால் வயிறு உப்புசம் சீராகி, செரிமானத்திற்கு மிகவும் உதவும்.
மேலும், தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வருவதன் மூலம் வைட்டமின் குறைபாடு சரியாகும்.
மோர் உடலில் தேவையற்ற நச்சுப் பொருட்களை வெளியேற்றி உள் உறுப்புகளை தூய்மைப்படுத்தும்.
இதில் அதிகம் உள்ள வைட்டமின் பி2 வயிற்றில் உள்ள கல்லீரல் நன்றாக செயல்பட உதவுகிறது.
ஒரு டம்ளர் மோருடன், மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை அரைத்து அதை மோரில் கலந்து குடித்தால் செரிமான கோளாறு தீர்ந்துவிடும்.
மோரில் சிறிது உப்பு மட்டும் கலந்து குடித்து வர மூலநோய் குணமாகும்.
மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் சாதாரண வயிற்றுப்போக்கை சரி செய்யலாம்.
சளி பிடிக்கும் என்பவர்கள் மோரை லேசாக சூடுபடுத்தி மஞ்சள் தூள் கலந்து குடித்தால் சளி பிரச்சனை வராது.
மோரில் எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் கோடை காலங்களில் உடலை வறட்சி நிலையிலிருந்து காக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |