தினமும் வேம்பு ஜூஸ் அருந்துவதால் இத்தனை நன்மைகளா?
பழங்காலத்தில் இருந்தே வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் சித்த மருத்துவம், நாட்டு வைத்தியம் முதல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
வேப்ப மரத்தின் பட்டை, இலைகள், விதைகள், வேர்கள், பூக்கள் மற்றும் பழங்கள் என எல்லாமே மருத்துவ குணங்கள் மிக்கவை. இதன் இலைகளில் மட்டும் 120 க்கும் மேற்பட்ட மூலப்பொருட்கள் உள்ளன.
குறிப்பாக இதன் இலையில் புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட முக்கிய சத்துக்கள் உள்ளன.
இதனை தினமும் ஜூஸ் அருந்துவதால் பல அற்புத பலன்களை உடலுக்கு வழங்குகின்றது.
அந்தவகையில் வேம்பு ஜூஸ் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- வேப்ப இலையில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. தினமும் வேம்பு ஜூஸ் அருந்தி வந்தால் அந்த இலைகளில் உள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை சீராக்கி நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவுகிறது. இதனால் உங்கள் குடல் இயக்கம் மேம்பட்டு மலச்சிக்கல் பிரச்னை நீங்கும்.
- வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க வேம்பு உதவுகிறது. எடை இழப்புக்கு அதிகரித்த வளர்சிதை மாற்ற விகிதம் மிகவும் முக்கியமானது. வேம்பில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் அதிக அளவு கலோரிகளை எரித்து உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
- வேம்பு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. தினமும் வேம்பு ஜூஸ் அருந்தி வந்தால் நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்திகரிக்கப்படுவதன் மூலம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ராசாயனங்கள் வெளியேறுகிறது. இதனால் உடலில் இருந்து ஆரோக்கியமற்ற நச்சுக்கள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.
- வேப்பிலையில் உள்ள பல்வேறு பயோகெமிக்கல் பொருட்கள், குழந்தைகள் அதிகம் அவஸ்தைப்படும் குடல் புழுக்களை அழித்து பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதற்கு குழந்தைகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் சிறிது வேப்பிலை கொழுந்தை சாப்பிட கொடுக்கலாம் அல்லது வேப்பிலையை ஜூஸ் வடிவிலும் கொடுக்கலாம்.
- வேப்ப இலைகளில் தயாரிக்கப்பட்ட ஜூஸ்-ஐ தினமும் அருந்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
- மலேரியா நோய்க்கு இந்த ஜூஸ்-ஐ குடிப்பதால், அது குயினின் போலவே பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- வேம்பில் அதிகளவு கால்சியம் உள்ளதால், நமது எலும்புகளுக்கு நன்மை தருவதாக இருக்கிறது. அதுமட்டுமின்றி புற்றுநோய்க்கு கூட வேம்பு மருந்தாக அமைகிறது.