தண்ணீருடன் வெல்லம், லெமன் ஜூஸ் கலந்து குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா? ட்ரை பண்ணி பாருங்க
உடல் எடையை உடனே குறைக்க நினைப்பவர்கள் இந்த டிப்ஸ்களை கண்டிப்பாக பின்பற்றலாம். குண்டாக இருப்பவர்கள் பல கேளி, கிண்டல்களை தினமும் சந்தித்து வருகின்றனர்.
இதனால் உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கி முயற்சி செய்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பானம் உதவியாக இருக்கும்.
தண்ணீரில் வெல்லம் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை உடனே குறைக்கிறது. சரி வாங்க.. இந்த பானத்தை எப்படி தயார் செய்வது குறித்தும் நன்மைகள் குறித்தும் பார்க்கலாம்.
தயாரிக்கும் முறை:-
தண்ணீர் எலுமிச்சை சாறு வெல்லம் புதினா முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கொண்டு நன்றாக கொதிக்கவிட வேண்டும். நன்றாக கொதித்த பிறகு அதில் சிறிதளவு புதினா, வெல்லம், 2 ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து மீண்டும் ஒரு பத்து நிமிடம் கொதிக்க விடவும். கடைசியில் தண்ணீரை வடிகட்டி அதை தினமும் பருகி வந்தால் உடல் எடையை ஈஸியாக குறைக்கலாம்.
நன்மைகள்:-
- இந்த தண்ணீரை குடிக்கும் போது உடலுக்கு தேவையான விட்டமின் சி கிடைக்கிறது. அதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் பெறலாம். குறிப்பாக உங்கள் செரிமானத்தை சீராக்குகிறது. சுவாசப்பாதையை சுத்தமாக்குகிறது.
-
இந்த பானம் விரைவில் பலன் கொடுக்க வீட்டிலே ஒரு சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. இவ்வாறு செய்வதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து ஒரே வாரத்தில் 2 கிலோ வரை குறைக்க முடியும்.