மண மணக்கும் ஏலக்காயை இப்படி பயன்படுத்தி பாருங்கள்! நன்மைகள் ஏராளம்
Health tips
Cardomom
By Logeswari
ஏலக்காயில் பல நன்மைகள் நிறைந்துள்ளது. ஏலக்காய் என்று சொன்னாலே அதலில் இருந்து வெளியாகும் நறுமணம் தான் நினைவிற்கு வரும். டீ, சர்க்கரை பொங்கல் போன்ற பல உணவுகளில் இதனை சேர்ப்பதுண்டு.
தினமும் உணவில் ஏலக்காய் மூன்றில் இருந்து ஐந்து வரை சேர்த்து கொள்வதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. சரி வாங்க ஏலக்காய் பயன்படுத்துவதால் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..
- குழந்தகள் சாப்பிட்ட பிறகு அடிக்கடி வாந்தி எடுப்பது உண்டு. அப்போது அவர்களுக்கு வாந்தி வராமல் இருக்க ஏலக்காயை பொடியாக்கி, அந்த பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளையும் தடவி வருவதால் வாந்தி உடனே நின்றுவிடும்.
- ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கு ஏலக்காய்களை நெருப்பில் போட்டு அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தால் மூக்கடைப்பு உடனே சரியாகும்.
- ஏலக்காய் டீ குடித்து வந்தால் மன அழுத்தத்தில் உள்ளவர்களை இயல்பு நிலைக்கு மாற்ற உதவுகிறது. அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்ச்சியால் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.
- நாக்கு வறட்சி, உடல் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, குமட்டல், செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகளை போக்க ஏலக்காயை வாயில் போட்டு மெல்லலாம்.
-
வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு கஷாயமாகக் காய்ச்சி குடிக்கலாம்.தேவைப்பட்டால் அதில் சிறிது பனை வெல்லமும் சேர்த்து கொள்ளலாம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US