தினமும் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும்? இனி இதை தவறிகூட ஒதுக்கிவிடாதீர்கள்
Health tips
Curry leaves
By Logeswari
கறிவேப்பிலையில் பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு. ஆனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதில் இருக்கும் நன்மைகளை புரிந்து கொள்ளாமல் சாப்பிடாமல் ஒதுக்கிவிடுவார்கள்.
கருவேப்பிலையை தினமும் உணவில் ஒருபங்காக எடுத்து கொண்டால் முடி உதிர்தல் பிரச்சனையை நிறுத்தி அடர்த்தியாக வளர உதவி செய்யும்.
தினமும் உணவில் கருவேப்பில்லை சேர்ப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
நன்மைகள்:-
- கறிவேப்பிலையில் நார்சத்து உள்ளதால் சாப்பிடும் உணவுகளை ஈசியாக செரிமானம் அடைய செய்கிறது. நம்மில் பலருக்கு மூக்கில் பிரச்னை வருவதுண்டு. நாசியில் எந்தவித அலர்ஜியும் ஏற்படாமல் கட்டியான சளியினை கரைத்து குணமாக்கும் சக்தியும் இதற்கு உண்டு.
- சில சமயங்களில் சர்க்கரை அளவு அதிகமாகக்கூடும். அப்போது உடம்பில் ஊறிய கறிவேப்பிலையின் சாறு சர்க்கரை அளவினை கட்டுப்படுத்த உதவுகிறது.
- சிலருக்கு காலையில் எழுந்தவுடன் வாந்தி போன்றவை ஏற்படும். குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு காலை முழுவதும் குமட்டல் இருக்கும். அப்போது கருவேப்பிலையை அதிகமாக சாப்பிடுவதால் எந்தவித நோயும் கர்ப்பிணி பெண்களை பாதிக்காமல் பாதுக்காக்கிறது.
- இரும்பு மற்றும் போலீக் ஆசிட்கள் அதிகளவில் கறிவேப்பிலையில் உள்ளதால் உடலில் உள்ள இரத்தச்சோகைக்கு தீர்வாகவும் இனிமேல் ஏற்படாமல் வகையிலும் தடுக்கிறது.
-
கண்பார்வை சரியாக தெரியாமல் போவது அனைவருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனை. காய்கறிகள்,கீரை வகைகளை அதிகம் சாப்பிட வேண்டும் எனவெல்லாம் கூறுவார்கள். ஆனால் கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் அதிகளவில் இருப்பதால் கண் குறைபாட்டை குறைக்கின்றது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US