தினம் 2 அத்திப்பழங்களை காலையில் எழுந்ததும் சாப்பிடுங்கள்! இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்குமாம்
Fig
Weight Loss
Hair Growth
Skin Care
By Kishanthini
அத்திப் பழத்தில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக உள்ளது
குறிப்பாக இதில், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம் ஆகியவை அதிக அளவில் நிறைந்திருக்கின்றன.
இதனை தினமும் இரண்டு பழங்கள் எடுத்து கொண்டால் உடலுக்கு நன்மையை தருகின்றது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
- அத்திப் பழம் தினமும் எடுத்துக் கொள்ளும்போது கணிசமான அளவில் உடல் எடையைக் குறைக்க முடியும்.
- அத்திப் பழத்தில் இரும்புச்சத்தும் அதிகமாக இருப்பதால் தலைமுடியின் வேர்க்கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
- அத்திப்பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் மூலம் உடலின் சோடியம் அளவு குறைந்து பொட்டாசியம் குறைபாடு சமநிலை செய்யப்படுகிறது. அதோடு இவற்றில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்களால் சோடியம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். இதனால் உயர் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் வரும்.
- தினமும் சில அத்திப்பழங்களை சிற்றுண்டி நேரங்களில் எடுத்துக் கொள்ளும்போது மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்ற அஜீரணக் கோளாறின் காரணமாகும் உண்டாகும் பிரச்சினைகைளைத் தவிர்க்க முடியும்.
- உடல் பலவீனமாகவும் ஆற்றல் குறைவாகவும் இருப்பவர்கள், ஒரு உலர்ந்த அத்திப்பழத்தை பொடியாக நறுக்கி, ஒரு கிளாஸ் பாலுடன் கொதிக்க வைத்து காலையில் குடிப்பது நல்லது..
- அத்திப்பழம் நம்முடைய மூளையில் செரோடோனின் அளவை அதிகரிக்கிறது. அதோடு மன அழுத்தம் மற்றும் மனப் பதட்டத்தை குறைக்கிறது. அதனால் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தி ஆழ்ந்த உறக்கத்தைப் பெற முடியும்.
- அத்திப்பழம் சருமத்தின் சீபம் சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது. அதனால் முகப்பரு வராமல் தடுக்க உதவுகிறது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US