தினமும் உணவில் ரசம் சேர்த்து கொள்வதால் ஏற்படும் ஆச்சரிய நன்மைகள்! இத்தனை நோய்களை தடுக்குமா?
தினமும் உணவில் ரசம் சேர்த்து கொள்வதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
புளிரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம், கொத்தமல்லி ரசம் என்று ரசத்தில் பலவிதம் உண்டு.
ரசம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
உணவில் ரசம் கலந்து சாப்பிட்டால் வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன பிரச்சினைகள் உடனே பறந்து போய்விடும்.
ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.
ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது.
ரசமானது மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது.
வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும், ரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது.
ரசத்தில் சேரும் வெள்ளைப்பூண்டு, ஆஸ்துமா, இதயக்கோளாறு, குடல் பூச்சிகள், சிறுநீரகத்தில் உள்ள கற்கள், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றைக் கட்டுப்படுத்துகிறது.