தினமும் பாலுடன் உலர் திராட்சையை சேர்த்து சாப்பிடுங்க... உடலில் பல நன்மைகள் ஏற்படும்!
உலர் திராட்சை பைட்டோ கெமிக்கல்கள் அதிகம் நிறைந்திருப்பதோடு, நார்ச்சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளதால், அன்றாட உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது. பல அற்புத நன்மைகளை வழங்குகின்றது.
உலர் திராட்சையை நாம் வெறுமனே சாப்பிடலாம் அல்லது நீர்/பாலில் கூட ஊற வைத்து சாப்பிடலாம். அதில் பாலில் ஊறவைத்து சாப்பிடுவது இன்னும் நல்ல பயனை தரும்.
அந்தவகையில் ஒருவர் பாலில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
நன்மைகள்
- நீங்கள் அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனையை சந்திப்பவராயின், தினமும் உலர் திராட்சையை பாலில் ஊற வைத்து சாப்பிடுங்கள்.
- உலர் திராட்சையில் ப்ரீபயாடிக்குகள் மற்றும் டார்டாரிக் அமிலம் உள்ளது. பாலுடன் உலர் திராட்சையை எடுக்கும் போது, அதில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் டயட்டரி நார்ச்சத்து குடல் மைக்ரோபயோட்டாவை மாற்றுவதற்கும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவும். எனவே குழந்தைகளுக்கும் உலர் திராட்சையை பாலுடன் சேர்த்து கொடுக்கலாம்.
- தினமும் உலர்திராட்சையை பாலுடன் சேர்த்து உட்கொண்டு வந்தால், இதய ஆரோக்கியம் மேம்படும். ஆகவே இதய பிரச்சனைகள் வரக்கூடாது என்றால், பாலுடன் உலர்திராட்சையை சாப்பிடுங்கள்.
-
வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த உலர் திராட்சை மற்றும் பால் பெரிதும் உதவுகிறது. எப்படியெனில் உலர் திராட்சையில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், பல் சொத்தைக்கு எதிராக பாதுகாக்க உதவும்.
- உலர் திராட்சையை சாப்பிடுவது இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றது. எனவே கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் உலர் திராட்சையை சேர்த்து உட்கொள்வது, இரத்த அழுத்த பிரச்சனையைக் குறைக்க உதவும்.
- நீங்கள் உங்கள் எலும்புகளை வலிமையாக்க நினைத்தால் பாலில் உலர் திராட்சையை சேர்த்து சாப்பிடுங்கள்.
- உலர் திராட்சை ஆண் கருவுறுதலை மேம்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளது. , விந்தணு இயக்கத்தை அதிகரிக்கும் செயல்பாடும் அதில் தீவிரமாக காணப்படுகிறது.
பாலுடன் உலர் திராட்சையை எப்படி மற்றும் எப்போது சாப்பிடலாம்?
- 6-8 உலர் திராட்சையை பாலுடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை வடிகட்டவும்.
- அதன் பின் உலர் திராட்சையை சாப்பிட்டு, அதைத் தொடர்ந்து பாலை குடிக்கலாம்.
- ஒருவேளை உங்களுக்கு உலர் திராட்சையை தனியாக சாப்பிட பிடிக்காவிட்டால், பாலில் சேர்த்து மசித்து குடிக்கலாம்.
- உலர் திராட்சை பாலை இரவு நேரத்தில் அல்லது காலை வேளையில் குடிப்பது நல்லது. ஒரு சிறப்பான மாற்றத்தைக் காண வேண்டுமானால், தொடர்ந்து 5-7 நாட்கள் குடிக்க வேண்டும்.
குறிப்பு
உலர் திராட்சையில் நார்ச்சத்து அளவுக்கு அதிகமாக உள்ளது. எனவே அளவுக்கு அதிகமாக ஒரே நேரத்தில் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்தால், அது வயிற்றுப் போக்கை ஏற்படுத்திவிடும். எனவே ஒரு நாளைக்கு பத்து உலர் திராட்சைக்கு மேல் சாப்பிட கொடுக்காதீர்கள்.