தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
இந்த காலகட்டத்தில் தீராத நோய்கள் பலவற்றை உள்ளது. இதற்கு முக்கிய காரணம் நாம் கடைபிடிக்கும் தவறான உணவுமுறை தான். தினமும் ஒரு பழம் சாப்பிடுவதால் தீர்க்க முடியாத நோய்களையும் விரட்டி அடித்துவிடலாம்.
ஏனென்றால் பழத்தில் அளவுக்கு அதிகமான ஆரோக்கிய நன்மைகள் குவிந்துள்ளது. அதுவும் தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிடும் போது உடலில் எந்த வித நோயையும் நெருங்கவிடாது.
சரிவாங்க தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
தயாரிக்கும் முறை:-
தேன்- 1கிலோ
நெல்லிக்காய்- 1கிலோ
முதலில் நெல்லிக்காயை நன்றாக அலசி தண்ணீரை வடித்து கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் நெல்லைக்காயை வைத்து நன்றாக வேக வைக்கவும். வெந்த பிறகு அதில் உள்ள கொட்டையை நீக்கி சிறு சிறு துண்டாக நறுக்கி ஒரு தட்டில் பரப்பி கொள்ளவும்.
1 கிலோ தேனை அதில் சேர்த்து நன்றாக கலந்து விடவும். இதனை ஒருவாரம் பகலில் வெயிலிலும் இரவு நேரத்தில் தேனிலும் ஊறவைத்தால் தேன் நெல்லிக்காய் ரெடி.
நன்மைகள்:-
- கர்ப்பப்பை கோளாறுகள் வராமல் தடுக்க வேண்டும் என்றால் பெண் பிள்ளைகள் தேனில் ஊறிய நெல்லிக்காயை தினமும் இரண்டு சாப்பிடலாம். மாதவிடாய் பிரச்சனை, கர்ப்பப்பை தொற்று போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
- தேன் நெல்லியில் இருக்கும் வைட்டமின் சி எதிர்ப்புசக்தி தரக்கூடியது. மேலும் இதில் இருக்கும் இரும்புச்சத்து இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. இதனால் இரத்த சோகை குறைபாடு பிரச்சனையில் இருந்து பாதுகாக்கிறது.
-
செரிமான பிரச்சனையால் பசியின்மையை சந்திப்பவர்கள் குறிப்பாக குழந்தைகள் தினமும் இதை சாப்பிட்டு வந்தால் கோளாறு நீங்கி பசியை தூண்டும்.