வெறும் வயிற்றில் காலையில் ஒரு கிளாஸ் குங்குமப்பூ நீரை குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
குங்குமப்பூ நல்ல நறுமணத்துடன் கூடிய ஒரு சுவையான மற்றும் விலை உயர்ந்த மசாலாவாக இருந்து வருகிறது.
அது மட்டுமின்றி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த குங்குமப்பூ நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த பல வழிகளில் உதவுகிறது.
இதனை தினமும் வெறும் வயிற்றில் தண்ணீரில் கலந்து குடிப்பதனால் இன்னும் பல பலன்களை அள்ளித்தருகின்றது. தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
குங்குமப்பூ நீர் செய்வது எப்படி?
குங்குமப்பூ நீர் தயாரிக்க, நீங்கள் 5 முதல் 7 நூல் குங்குமப்பூவை எடுத்து அவற்றை 10 நிமிடங்கள் சூடான நீரில் ஊற வைக்க வேண்டும்.
இந்த தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். சிறந்த பலன்களுக்கு நீங்கள் இந்த பானத்தை தொடர்ந்து உட்கொள்ளலாம்.
Image - timesofindia
நன்மைகள்
- தண்ணீரில் ஒரு சிறிய குங்குமப்பூவை சேர்த்து குடித்து வந்தால் இதில் ஆன்டி- ஆக்ஸிடண்ட்டுகள் சருமத்தில் உள்ள ஃப்ரீ-ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடுவதோடு அவை உருவாகாமல் பார்த்துக் கொள்ளும்.
- மாதவிடாய் தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே குங்குமப்பூவை தண்ணீரில் போட்டு குடித்து வர வேண்டும். இது அந்த மாதவிடாய் சுழற்சி நேரத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களை சரிசெய்ய உதவும்.
- குங்குமப்பூ உள்ள சில ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி பசியையும் கட்டுப்படுத்துகிறது. உடலின் மெட்டாலிசத்தை இப்படி குங்குமப்பூ சீராக வைத்திருக்கச் செய்வதால் உடல் எடை குறைய ஆரம்பிக்கிறது.