பாய்ந்து வந்த புலி; மிரண்டு ஓடிய நபர்! பதறவைக்கும் காட்சி., புலியை வீதியில் திறந்துவிட்ட கொலை குற்றவாளி கைது
அமெரிக்காவில் மக்கள் நடமாடும் வீதியில் வங்கப் புலியை திறந்துவிட்ட கொலை குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மக்கள் நடமாடம் சாலையில் ஒரு வங்கப் புலி அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிந்தது.
Victor Hugo Cuevas என்பவருக்கு சொந்தமான அந்தப் புலி, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களை தாக்க முயன்றுள்ளது.
Rob Wormald என்பவர் அந்தப் புலி தனது பெற்றோரை தாக்க முயன்றபோது வீடியோ எடுத்துள்ளார், அப்போது அவரைப் பார்த்த அந்த புலி வேகமாக பாய்ந்து வந்ததைக் கண்டு தலை தெறிக்க வீட்டுக்குள் ஓடினார்.
Apparently there's a tiger loose on my parents' West Houston street? pic.twitter.com/TgdIiPSPKx
— robwormald (@robwormald) May 10, 2021
இந்த காட்சிகளை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் பலர் அந்த புலி குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிவதை படம் பிடித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் பொலிஸார் குவிந்த நிலையில், Cuevas புளியை தனது Jeep Cherokee காரில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
26 வயதான Victor Hugo Cuevas ஒரு கொலை வழக்கில் சிறையிருந்து சமீபத்தில் தான் ஜாமினில் வெளியே வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
UPDATE: Victor Hugo Cuevas, 26, is charged with felony evading arrest for fleeing from HPD patrol officers this morning. Attached is a 2017 booking photo.
— Houston Police (@houstonpolice) May 10, 2021
If you see him, call @CrimeStopHOU at 713-222-TIPS.
The tiger portion of the investigation is continuing.#hounews https://t.co/8tI5FeZvJH pic.twitter.com/XCo9rvXOHI
இந்நிலையில், செவ்வாயன்று பொலிஸார் Cuevas-ஐ கைது செய்துள்ளனர். விசாரணையில், அவரிடம் குரங்குகள் கூட இருப்பதாக தெரியவந்தது. அவற்றை வளர்க்க ஹூஸ்டன் நகரத்தில் அனுமதிக்கப்படுகின்றன.
ஆனால், ஒரு புலி வைத்திருப்பது ஹூஸ்டன் சட்டத்துக்கு புறம்பானது, ஆனால் இது டெக்சாஸ் மாநில சட்டத்தின் கீழ் சில கட்டுப்பாடுகளுடன் சட்டப்பூர்வமானது என்பது குறிப்பிடத்தக்கது.
புலியை பொது வெளியில் அச்சுறுத்தும் விதமாக திறந்து விட்டதற்கு 500 டொலர் அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த வங்கப் புலி 9 மாதமே ஆன ஒரு ஆண் புலி என்றும், அதன் பெயர் 'இந்தியா' என வைக்கப்பட்டுள்ளதாகவும் Cuevas-ன் வழக்கறிஞர் Michael Elliott கூறினார்.