அண்ணியின் தலையுடன் சாலையில் சென்ற நபர்; பதறிய மக்கள் - நடந்தது என்ன?
மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் 55 வயதான பிமல் மொண்டல்.
இவருக்கு நீண்ட காலமாக அவரது அண்ணன் குடும்பத்தினருடன் சொத்து காரணமாக தகராறு இருந்துள்ளது.
தலையுடன் சாலையில் சென்ற நபர்
இந்நிலையில் நேற்று தோட்டத்தில் மாம்பழம் பறிப்பதில் அவரது அண்ணியுடன் ஏற்பட்ட மோதலில், அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதத்தால் அவரது அண்ணியின் தலையை துண்டித்துள்ளார் பிமல்.
மேலும், அந்த தலையை கையில் வைத்து கொண்டு ஆக்ரோஷமாக வீதி வீதியாக நடந்து சென்றுள்ளார்.
ரத்தம் சொட்ட சொட்ட தலையை கையில் வைத்துக்கொண்டு அவர் நடந்து செல்வதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த மக்கள் அதனை வீடியோ எடுத்தனர்.
அந்த தலையுடன், பிமல் நேராக பசந்தி காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். அவரை கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது அண்ணியின் தலையில்லாத உடல் அங்குள்ள மாந்தோட்டம் ஒன்றில் குடும்ப உறுப்பினர்களால் அடையாளம் காணப்பட்டது. அந்த உடல் பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
துண்டிக்கபட்ட தலையில் கையில் வைத்துக்கொண்டு, பிமல் சாலையில் நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |