இரத்தக்கரை படிந்த சட்டையுடன் ஸ்கூட்டரில் பயணித்த நபர்: தடுத்து நிறுத்திய பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
பெங்களூருவில், இரத்தக்கரை படிந்த சட்டையுடன் ஸ்கூட்டரில் பயணித்த நபர் ஒருவரைத் தடுத்து நிறுத்திய பொலிசாருக்கு கடுமையான அதிர்ச்சி காத்திருந்தது.
பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
பெங்களூருவில் நேற்று இரவு 11.30 மணியளவில் இரத்தக்கரை படிந்த சட்டையுடன் ஸ்கூட்டரில் பயணித்துக்கொண்டிருந்த ஷங்கர் (26) என்பவரை பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.
அப்போது, ஸ்கூட்டரில் கால்வைக்கும் இடத்தில் ஒரு பெண்ணின் தலை இருந்ததைக் கண்ட பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
விசாரணையில், ஷங்கர் தன் மனைவியான மானசாவுக்கும் (26) வேறொரு நபருக்கும் தவறான உறவு இருப்பதாக சந்தேகித்ததால் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
ஒரு கட்டத்தில் மானசா வீட்டை விட்டு வெளியேறி ஹாஸ்டல் ஒன்றில் தங்கியுள்ளார். பின்னர் தங்கள் மகளுக்காக சேர்ந்து வாழலாம் என மீண்டும் வீட்டுக்குத் திரும்பியும் தம்பதியருக்குள் சண்டை தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், நேற்று நடந்த சண்டையின்போது தன்னிலை மறந்த ஷங்கர், கோடாலி ஒன்றால் மானசாவைத் தாக்கிக் கொன்றுள்ளார்.
ஸ்கூட்டரில் பயணித்துக்கொண்டிருந்த ஷங்கரைத் பொலிசார் தடுத்து நிறுத்த, அவர் தன் மனைவியின் தலையை வெட்டி எடுத்துக்கொண்டு பயணித்துக்கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஷங்கரிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |