சுக்கு-க்கு மிஞ்சிய மருந்தில்லை! நோய்களை அடித்து விரட்டும் அற்புதம்
"சுக்கு மிளகு திப்பிலி" என்ற மூன்று மருத்துவப் பொருட்களின் மருத்துவ குணங்களை உவமை காட்டி எழுதப்பட்ட நூலே திரிகடுகம்.
இதில் உள்ள முதல் பொருளான சுக்கு பற்றி உங்களுக்கு தெரியுமா? சுக்கு மிஞ்சிய மருந்தில்லை என பலரும் சொல்லக்கேட்டிருப்போம்.
அந்த வகையில், சுக்கு சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கும், சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சுக்கே சிறந்த தீர்வாகிறது.
வாந்தியை நிறுத்துவதுடன், வாயுவை கட்டுப்படுத்தகூடியது, நெஞ்சு சளியை கரைத்து வெளியேற்றும்.
எப்படியெல்லாம் சாப்பிடலாம்?
* சுக்கை மென்று அதன் சாற்றை மட்டும் விழுங்கினால் தொண்டைக்கட்டு சரியாகும்.
* சுக்கு மற்றும் அதிமதுரத்தை பொடி செய்து 1 கிராம் அளவுக்கு தேனில் குழைத்து சாப்பிட்டால் இருமல் சரியாகும்.
* சுக்கை பற்றாக தலையில் போட்டால் தலைவலி பறந்தோடும், மூட்டின் மீது தடவினால் மூட்டு வலி சரியாகும்.
* 1 டம்ளர் நீரை கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி, நீரில்1 ஸ்பூன் சுக்குப் பொடியை கலந்து வைக்க வேண்டும், நீர் ஆறிய பின்னர் தேன் அல்லது சர்க்கரை கலந்து பருகி வர வயிறு பிரச்சனைகள் சரியாகும்.
* பூண்டுடன் சுக்கு சேர்த்து சாப்பிட்டால் வயிற்று நோய் குணமாகும், தேனும் எலுமிச்சை சாறு குழைத்து சாப்பிட்டால் உடல் பலம் தரும்.
மிக முக்கியமாக சுக்குடன் எதை சேர்த்து சாப்பிட்டாலும் தீங்கு ஏற்படாது என்பதே உண்மை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |