ஜேர்மனியில் இதற்கு அனுமதியில்லை..! தடை விதித்த நீதிமன்றம்
ஜேர்மனியில் ஊரங்கு எதிர்ப்பு போராட்டங்களுக்கு பெர்லின் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஜேர்மனியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிரானவர்கள், வார இறுதி நாட்களில் தலைநகர் பெர்லினில் கூடி போராட்டங்களை முன்னெடுக்கப் போவாதாக அறிவித்தனர்.
இதனையடுத்து, ஊரடங்கு எதிர்ப்பு போராட்டங்களுக்கு பெர்லின் அதிகாரிகள் தடை விதித்தனர்.
இந்த பிரச்சினை பெர்லின் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
அதாவது, Querdenker என்ற ஊரடங்கு எதிர்ப்பு இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் உட்பட 13 போராட்டங்களுக்கு அனுமதியளிக்க பெர்லின் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த போராட்டங்களில் பங்கேற்க பெர்லினுக்கு வெளியே இருந்து பலர் வருவார்கள், மேலும் போராட்டகாரர்கள் முகக் கவசம் அணியமாட்டோம் என தெரிவித்துள்ளதால் பொலிசார் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனால் டெல்டா மாறுபாடு பரவலுக்கு வழி வகுக்கும் என்ற அச்சத்தில் போராட்டங்களுக்கு தடை விதிப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.