பெர்லின்வாழ் வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமைக்கு ஒன்லைனிலேயே விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம்
ஜேர்மன் தலைநகர் பெர்லினில் வாழும் வெளிநாட்டவர்கள், ஜேர்மன் குடியுரிமைக்கு ஒன்லைனிலேயே விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒன்லைனிலேயே விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம்
நேற்று ஜேர்மன் புலம்பெயர்தல் அலுவலகம் துவங்கிய சேவை ஒன்றின்படி, பெர்லினில் வாழும் வெளிநாட்டவர்கள், தாங்கள் ஜேர்மன் குடியுரிமை பெறத் தகுதியுடையவர்களா என சோதித்து தங்கள் குடியுரிமை விண்ணப்பங்களையும் இனி ஒன்லைனிலேயே சமர்ப்பிக்கலாம்.
அதற்கான விண்ணப்பக் கட்டணம் 255 யூரோக்கள் ஆகும். அதையும் ஒன்லைனில், பேபால் வழியாக, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம்.
Photo: picture alliance / Kay Nietfeld/dpa | Kay Nietfeld
வருந்தத்தக்க விடயம் என்னவென்றால், நேற்று காலை பரபரப்பாக துவங்கிய இந்த சேவையின் லிங்க் திடீரென வேலை செய்யாததால், மக்கள் கடும் எரிச்சலுக்காளானார்கள்.
ஊடகவியலாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்ப, அந்த இணையதளம் க்ராஷ் ஆனது உண்மைதான் என ஒப்புக்கொண்ட அதிகாரிகள், விரைவிலேயே அது சீர்செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |