பெர்லின் மருத்துவமனை ஒன்றில் கொல்லப்பட்ட 1,200 உயிரினங்கள்: பின்னணி
ஜேர்மன் தலைநகரான பெர்லினில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில், 1,200 எலிவகை உயிரினங்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெர்லினில் உள்ள Charite மருத்துவமனையின் ஆய்வகத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த ஆய்வகத்தில், பரிசோதனைகளுக்காக சுமார் 1,200 எலி வகை உயிரினங்கள் வைக்கப்பட்டிருந்திருக்கின்றன.
அவை வைக்கப்பட்டுள்ள இடத்தில் Coxiella என்னும் கிருமி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த Coxiella வகை கிருமி, Q fever என்னும் நோயை உண்டாக்கக்கூடியதாகும்.
மனிதர்கள் இந்த பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள விலங்குகளுக்கு அருகில் செல்லும்போது, அங்குள்ள காற்றில் பரவியிருக்கும் தூசி, நீர்த்துளிகள் முதலானவற்றை சுவாசித்தால், அவை மூலம் அவர்களுக்கு இந்த Q fever பரவிவிடும்.
அதைத் தவிர்ப்பதற்காகத்தான், அரசின் அனுமதி பெற்று அந்த 1,200 உயிரினங்களும் கொல்லப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.