முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க இந்த ஒரு மாவு போதும்.., எப்படி பயன்படுத்துவது?
பெண்களின் முகம் முடிகளின்றி மிருதுவாக இருக்கும், ஆனால் சில பெண்களின் முகத்தில் முடிகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
ஹார்மோன் காரணமாக சில பெண்களுக்கு மீசையும் தடியும் தெரிவதோடு, நெற்றியில் முடிகள் அதிகளவில் இருக்கும்.
அந்தவகையில், முகத்தில் உள்ள முடி நிரந்தரமாக நீங்க இயற்கை முறையில் கடலை மாவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலைமாவு- 2 ஸ்பூன்
- கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன்
- மஞ்சள்- 1 ஸ்பூன்
- பால்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில், கடலைமாவு கற்றாழை ஜெல் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
பின் இதனுடன் பால் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் சமமாக தடவ வேண்டும்.
இதற்கு பிறகு 15 - 20 நிமிடங்களுக்கு அதை முகத்தில் உலர விடுங்கள்.
இதற்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவும்போது வட்ட இயக்கங்களில் மெதுவாக மசாஜ் செய்யவும்.
இதனை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள தேவையற்ற முடியை நிரந்தரமாக நீக்கி விடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |