இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து இலங்கை நட்சத்திர துடுப்பாட்டகாரர் விலகல்? கசிந்த தகவல்
இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து இலங்கை துடுப்பாட்டகாரர் பானுக ராஜபக்ச விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொரை 2-1 என கைப்பற்றியது.
இதனையடுத்து, நேற்று கொழும்பில் நடந்த முதல் ஒரு டி-20 போட்டியிலும் வென்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.
மீதமுள்ள இரண்டு டி-20 போட்டிகளையும் கைப்பற்றி இந்தியாவுக்கு இலங்கை அணி பதிலடி கொடுக்குமா என இலங்கை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இந்நிலையில், விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியிலிருந்து விலகிய இலங்கை வீரர் பானுக ராஜபக்ச, மீதமுள்ள இரண்டு டி-20 போட்டிகளிலிருந்தும் விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் பானுக ராஜபக்ச 65 ஓட்டங்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் டி-20 போட்டியில் பானுக ராஜபக்சாவுக்கு பதிலாக Ashen Bandara இலங்கை அணியில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.