என்னை மன்னிச்சிடுங்க! பதக்கம் வெல்ல முடியவிலலை- டுவிட்டரில் உருகிய பவானி தேவி
இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வீராங்கனை என்ற பெருமைக்கு சொந்தக்காரர் பவானி தேவி.
ஒலிம்பிக் வாள்வீச்சு முதல் போட்டியில் நாடியா அசிசீயை 15/3 என்ற கணக்கில் வென்ற போதும், இரண்டாவது போட்டியில் தோல்வியை தழுவினார்.
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பவானி தேவி மிகவும் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
அதில், ” இது எனக்கு மிகப் பெரிய நாள். உற்சாகமாகவும் உணர்வுபூர்வமாகவும் உணர்கிறேன். நான் என்னுடைய மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன்.
ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அதற்காக நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
எல்லா முடிவுகளுக்கும் ஒரு ஆரம்பம் இருக்கிறது. நான் தொடர்ந்து பயிற்சி எடுத்து பிரான்ஸில் நடக்கும் அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வென்று எனது நாட்டை பெருமையடைய செய்வேன் என தெரிவித்துள்ளார்.
Big Day 🤺
— C A Bhavani Devi (@IamBhavaniDevi) July 26, 2021
It was Excitement & Emotional.
I won the First Match 15/3 against Nadia Azizi and become the First INDIAN Fencing Player to win a Match at Olympic but 2nd Match I lost 7/15 against world top 3 player Manon Brunet. I did my level best but couldn't win.
I am sorry 🙏 🇮🇳 pic.twitter.com/TNTtw7oLgO