பெங்களூரு தோல்விக்கு பின்...கோலி கேப்டன்சி பற்றி அக்கா போட்ட உருக்கமான பதிவு
பெங்களூரு அணிக்கு கேப்டனாக கோலி செய்தது குறித்து அவருடைய தங்கை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்று முன் தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில், பெங்களூரு அணி கொல்கத்தாவிடம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் பெங்களூரு அணி தொடரை விட்டு வெளியேறியது. பெங்களூரு அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து இந்த ஆண்டோடு, விலகுவதாக கோலி அறிவித்ததால், இந்த முறை அவருக்காகவது நிச்சயம் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அது முடியாமல் போய்விட்டது. இருப்பினும் கோலி இந்த போட்டி முடிந்த பின்பு, தான் கடைசி வரை பெங்களூரு அணிக்காக தான் விளையாடுவேன் என்று கூறிவிட்டார்.
இந்நிலையில், கோலியின் அக்காவான Bhawna Kohli Dhingra தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நீங்கள் ஒரு கேப்டனாக உங்களால் முடிந்ததை செய்துள்ளீர்கள்.
எப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையிலும், நீங்கள் எப்போதும் உங்கள் தோள்களை உயர்த்தியே வைத்திருந்தீர்கள். நீங்கள் எப்போதும் ஒரு குறிப்பிடத்தக்க கேப்டனாக இருப்பீர்கள், பெங்களூரு அணியின் கேப்டன்சிக்கு என்று தனிப் பெயர் உங்களுக்கு உண்டு.
என்றென்றும் அதற்குரிய மரியாதை மற்றும் பாராட்டுக்கு தகுதியானவர். உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.