இந்தியாவிலேயே 100 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்திய முதல் நகரம்!
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமே கொரோனா தடுப்பூசியை செலுத்தி முதல் இந்திய நகரமாக புவனேஷ்வர் சாதனை படைத்துள்ளது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இந்திய அரசாங்கம் பல திட்டங்களை கையாண்டுயுள்ளது.
இதன் ஒரு பகுதியாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி மும்முரமாக செலுத்தப்பட்டு வருகின்றது.
தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுகளும் அவ்வப்பொழுது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புவனேஷ்வர் நகரத்தில், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் இந்திய நகரம் என்ற பெருமையை பெற்றுள்ளது.