முப்படை தளபதி பிபின் ராவத் இறுதியாக பேசியது என்ன? கவனத்தை ஈர்க்கும் காணொளி
இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் ராணுவத்தை குறித்து கடைசியாக பேசிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் கடந்த 8ஆம் திகதி குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது. இதில் தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்ளிட்ட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் பிபின் ராவத் ராணுவத்தை குறித்து பேசிய கடைசி வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. கடந்த டிசம்பர் 7ஆம் திகதி பதிவு செய்யப்பட்ட வீடியோவில் பிபின் ராவத் இந்திய இராணுவத்தின் துணிச்சலான வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த வீடியோ இவர் தமிழகத்திற்கு புறப்படுவதற்கு முன் ஒருநாள் முன்னதாக பதிவு செய்யப்பட்டதாகும்.1971 போரில் இந்தியாவின் 50 ஆண்டு வெற்றியை நினைவுகூரும் வகையில் ஸ்வர்னிம் விஜய் பர்வ் கொண்டாடப்படுகின்றது.
#WATCH Late CDS General Bipin Rawat's pre-recorded message played at an event on the occasion 'Swarnim Vijay Parv' inaugurated today at India Gate lawns in Delhi. This message was recorded on December 7.
— ANI (@ANI) December 12, 2021
(Source: Indian Army) pic.twitter.com/trWYx7ogSy
வங்கதேசத்தில் நடந்த போரில் கிடைத்த வெற்றிக்கு இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார். மேலும் அமர் ஜவான் ஜோதி அருகே இவ்விழா கொண்டாடப்படுவது சிறப்பானது என்றும் பிபின் ராவத் பேசியுள்ளார்.
விஜய் பர்வ் கொண்டாட்டத்தில் பங்கேற்க அனைத்து குடிமக்களையும் நாங்கள் அழைக்கிறோம் என்று கூறினார் பிபின் ராவத். இந்த வீடியோ தற்போது பலரால் பகிரப்பட்டு வருகின்றது.