குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு!
இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 4 பேருக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவிற்கு அடுத்த நிலையில் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் உள்ளன. இவைகளை பத்ம விருதுகள் என்று அழைக்கப்படுகின்றது.
அரசியல், சமூகம், கலை, கலாசாரம், சினிமா, பொது சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் 4 பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 107 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் நாட்டிற்கு செய்த சேவையை கெளரவிக்கும் வகையில் அவருக்கு நாட்டின் 2வது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவரை தொடர்ந்து மறைந்த உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் உட்பட 4 நான்கு பேருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட உள்ளது.