அமெரிக்க அதிபரின் முதல் அழைப்பை புறக்கணித்த ஜேர்மன் சேன்ஸலர்: வேறு வழியில்லாமல் அவர் அழைத்த அடுத்த தலைவர்
அமெரிக்க அதிபராக பதவியேற்றதும், ஜோ பைடன், தான் தொலைபேசியில் அழைக்கும் முதல் தலைவர் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலாக இருக்கவேண்டும் என விரும்பினாராம்.
ஆனால், ஏஞ்சலா அவரது அழைப்பை ஏற்பதற்கு பதிலாக கிராமத்திலுள்ள தன் வீட்டில் நேரம் செலவிட்டுக்கொண்டிருந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பெர்லினிக்கு வெளியே உள்ள தனது வீட்டில் அவர் வார இறுதி நாட்களை செலவிடுவதுண்டாம். தனது காய்கறித் தோட்டத்தைக் கவனிப்பதும், அங்குள்ள ஏரியின் ஓரமாக வாக்கிங் செல்வதுமாக அவர் தனது வார இறுதி நாட்களை செலவிடுவதுண்டு என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆக, ஜேர்மன் சேன்ஸலர் தன் அழைப்பை ஏற்காததால், ஜோ பைடன் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனை அழைத்ததாகவும், அவர் பைடனின் முதல் அழைப்பை ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவைப் பொருத்தவரை, முன்னாள் அமெரிக்க அதிபரான ட்ரம்ப் ஜேர்மனியுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்து வந்தார். ஆனால், ஜோ பைடன் அதை மாற்ற விரும்புகிறார்.
ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டுவருவதற்காக குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றுவந்த நிலையில், ட்ரம்ப் அதை எதிர்க்க, பைடன் அதற்கு ஒப்புதலளித்ததை ஜோ பைடன் ஜேர்மனியுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ள விரும்புவதற்கான ஒரு உதாரணமாக கூறலாம்.