பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த பெண் வீட்டின் அலமாரி முழுவதும் குவிந்து கிடந்த பணம்! அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்
பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த பெண் வசித்த இடத்தில் அதிகளவில்பணம் இருப்பதை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
கேரள மாநிலத்தின் அலுவா நகரை சேர்ந்த ஆயிஷா பிவாஸ். இவர் அங்குள்ள இடங்களில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். இரவு நேரத்தில் ஜமாத் கட்டிடத்தில் தங்கி வந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் பள்ளத்தில் விழுந்து ஆயிஷா உயிரிழந்துவிட்டார். இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்திய நிலையில் அவர் தங்கிய அறைக்கு சென்று பார்வையிட்ட போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஏனெனில் அங்குள்ள அலமாரியில் அதிகளவில் ரூபாய் நோட்டுகள் இருந்தது. சிறியளவில் கட்டுக்கட்டாக வைக்கப்பட்டபடி பணம் இருந்தது. அதை அதிகாரிகளும் பொலிசாரும் எண்ணிய போது ரூ 4,50,000 (இலங்கை மதிப்பில்) இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் ஆயிஷா தொடர்பான செய்தி வைரலானது, இதை பார்த்த அவரின் உறவினர்கள் அங்கு வந்தனர்.
ஆயிஷாவின் பணம் அவர்களுக்கு கொடுக்கப்படுமா அல்லது வேறு விடயங்களுக்கு பயன்படுத்தப்படுமா என்ற விபரம் இன்னும் தெரியவில்லை.